தேனி, ஜூன் 11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மூத்த படைப்பாளி தேனி சீருடை யானுக்கு முப்பெரும் விழா நடைபெற்றது. தேனி சீருடையான் எழுதிய ‘ஒற்றை வாசம் ‘என் னும் நாவல் வெளியீடு, சீரு டையான் வாழ்வியலை எடுத் துக் கூறும் ‘தனித்த பறவை ‘ஆவணப்படம் வெளியீடு, தமிழ்ச்செம்மல் விருது பெற்றமை என முப்பெரும் விழா நடைபெற்றது . தேனியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலை வர் இதயநிலவன் தலைமை வகித்தார் .பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார் . தனித்த பறவை ஆவ ணப்படத்தை மாநில செயற்குழு உறுப்பினர் அ. உமர்பாருக் வெளியிட மாநி லக்குழு உறுப்பினர் சுரு ளிப்பட்டி சிவாஜி பெற்றுக் கொண்டார் .இயக்குனர் -மாவட்ட செயலாளர் அய். தமிழ்மணி ஏற்புரை நிகழ்த்தி னார் .ஒற்றை வாசம் நாவலை பொறியாளர் அ.ராதா கிருஷ்ணன் வெளியிட தொழிலதிபர் சரவணன் பெற்றுக்கொண்டார் .தமிழ்ச்செம்மல் விருது பெற்றமையை பாராட்டி எழுத்தாளர் ச.தமிழ்செல் வன் உரையாற்றினார் .எழுத்தாளர் தேனி சீருடை யான் ஏற்புரை நிகழ்த்தினார் .தேனி வட்டார தலைவர் காளிதாஸ் நன்றி கூறினார். விழாவில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜிலா ரிஜ்வான், ப.மோகன் குமார மங்கலம் ,மாநில செயற் குழு உறுப்பினர் ம.காமுத் துரை, கே.எஸ்.கே.நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் யாழ் தண்விகா, அமிழ்தினி தனசேகரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.