மானாமதுரை, ஏப்.11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினரும் சிறுகதை எழுத்தாளருமான மறைந்த தோழர் செல்வக்கதிரவனின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு மானா மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜீவ சிந்தன், மாவட்டத் தலைவர் முனைவர் இரா.தங்கமுனி யாண்டி, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் திருமா வளவன், மாவட்ட பொருளாளர் பெ.பாலமுருகன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாட்டுப்புற பாடகர் தமிழ்கனல்,கிளைச் செயலாளர் ஒ.ரசீந்திரகுமார், திருவள்ளுவர் படிப்பக பொறுப்பாளர் கவிஞர் மு.சோம சுந்தரபாரதி, மாற்று திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் முத்துராமலிங்கம் பூபதி, தோழர் செல்வகதிரவன் மகன் திருவரங்கன் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.