மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், தமிழகத்தின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவருமான என்.ராமகிருஷ்ணன் முதலாம் ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்ச்சி தீக்கதிர் வளாகத்தில் திங்களன்று நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்.ஏ.பெருமாள், சு.பொ.அகத்தியலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று தோழர் என்.ராமகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். இதைத் தொடர்ந்து சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய “முதுமை வரமா? சாபமா?” என்ற நூல் வெளியிடப்பட்டது.