districts

img

திண்டுக்கல்லில் உலக இதய தின மாரத்தான்

திண்டுக்கல், அக்.2-  உலக இதய தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் மினி  மாரத்தான் போட்டி அக்டோபர் 2 அன்று நடைபெற்றது.  இத யத்தை பாதுகாப்பது குறித்தான விழிப்புணர்வுக்காக இந்திய  மருத்துவ சங்கம், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம்  சார்பாக மினி மாரத்தான் போட்டி எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் துவங்கியது.  ஆண்களுக்கு 12 கி.மீ தூரமும், பெண்களுக்கு 7 கி.மீ  தூரமும் என நிர்ணயிக்கப்பட்டு இரண்டு பிரிவாக நடை பெற்றது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பாஸ்க ரன் துவக்கி வைத்தார்.மாவட்ட விளையாட்டு மைதா னத்தில் நிறைவடைந்தது. மாவட்ட ஆட்சியர் விசாகன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்திய மருத்துவ சங்கம் சார்பாக மருத்துவர்கள், எம்.எஸ்.பி. பள்ளி தாளாளர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். மாரத்தானில் 2500 பேர் கலந்து கொண்ட னர். (நநி)