districts

img

தூத்துக்குடியில் உலக புத்தக தின விழா

தூத்துக்குடி, ஏப்.24- தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தக தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்ககளுக்கு பரிசுகளை வழங்கி  பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அதிகாரி ரங்கநாயகி, மாவட்ட மைய நூலக அதிகாரி ராம் சங்கர், நூலகர் விஜயலட்சுமி லதா, அலுவலக உதவியாளர் அருணா சலம், அரிமா சங்க தலைவர் சுரேஷ் தங்க  ராயப்பர், கட்டிடக் கலை வல்லுநர் முகமது ரியாஸ், எழுத்தாளர் நெய்தல் யூ அண்டோ  மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.