மதுரை, ஏப்.22- அட்சயம் என்றால் அள்ள அள்ளக் குறையாதது எனப் பொருள். பாரதி புத்தகலா யத்தின் மதுரை மாவட்டக் கிளை அட்சய திருதியைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தனது அறிவுத் திருவிழாவை தொடங்கி நடத்தி வருகிறது. இந்தத் திருவிழா ஏப்ரல் மாதத்தின் இறுதி வரை நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் நாகமலைப்புதுக்கோட்டை, உசிலம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை அய் யர் பங்களா அருகே உள்ள உச்சப்பரம்பு மேடு ஆகிய இடங்களில் புத்தகத் திரு விழாவை நடத்தி முடித்துள் ளது. அள்ள அள்ள குறை யாத அட்சய பாத்திரம் போல் புத்தகங்களால் நிரம்பி வழிந்த திருவிழாவில் சிறு வர் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கான புத்த கங்களை வாங்கிச் சென்ற னர். அந்த வகையில் பாரதி புத்தகாலயத்தின் மதுரை மாவட்டக் கிளை ரூ,1.50 லட் சத்திற்கு புத்தகங்களை விற்று சாதனை படைத்துள் ளது. மதுரை மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பே அட்ச யத் திருதியை புத்தகங்க ளோடு கொண்டாடி மகிழ்ந் தார்கள்.