அரசு விரைவுப் பேருந்து மோதியதில் தொழிலாளி பலி
அருப்புக்கோட்டை, ஜூன் 12- அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (70).தச்சு வேலை செய்து வந்தார். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் இருந்து செட்டிகுறிச்சி நோக்கி சைக்கிளில் மாரியப்பன் சென்று கொண்டிருந்தார். ராமசாமிபுரம் விலக்கு அருகே உள்ள அணுகு சாலையில் இருந்து புறவழிச்சாலைக்கு சென்ற போது சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து மிதிவண்டி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மாரியப்பனை அங்கிருந்த வர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான விளாத்திகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மீது நகர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி, கூடலூரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது
தேனி, ஜூன் 12- தேனி, கூடலூர் பகுதிகளில் வாகனத் தணிக்கையின் போது கஞ்சா கடத்திய 4 பேரை கைது செய்தனர். தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் பழனிசெட்டி பட்டி காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு சென்ற சிலம்பரசன் (33), பிரதீப் (27) ஆகியோரை மடக்கினர். இதில் பிரதீப் தப்பிஓடிவிட்டார். சிலம்பரசனை காவல்துறையினர் கைது செய்து 1.150 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கூடலூர் வடக்கு காவல் துறையினர் கருநாக்க முத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக் காக வைத்திருந்த சந்தோஷ்(23), சிவனேந்திரன் (25), தெய்வம் (55) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.
கூடலூரில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை காவல்துறையினர் விசாரணை
தேனி, ஜூன் 12- கூடலூரில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர் பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் அர்ச்சனா (20). இவருக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவிக்குமா ருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும் ரவிக்குமார் மது குடித்து வந்ததால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது.சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனாவை கூடலூர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற ரவிக்குமார், மருத்துவமனை யில் அவரை விட்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அர்ச்சனாவின் தாயார் பிரியா கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா விசா ரித்து வருகிறார்.
ஆற்றில் கவிழ்ந்த லாரி வெடித்தது நான்கு பேர் பலி
புபனேஸ்வர், ஜூன் 12- ஒடிசாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து வெடித்து சிதறியதால் 4 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின் பரதீப் பகுதியில் இருந்து நள்ளிரவு 2 மணி அளவில் பெட்ரோல், டீசல் ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் மேகார் பகுதியை நோக்கி சென்றன. இடாமதி என்ற பகுதியில் குசுமி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் மீது சென்று கொண்டிருந்த போது முதலில் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. மற்றோரு லாரியில் இருந்தவர்கள் அவர்களை மீட்க சென்றனர். அப்போது ஆற்றில் கவிழ்ந்த லாரி வெடித்து சிதறியது. இதில் காப்பாற்ற சென்றவர்களோடு சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடு பட்டனர்.
உளுந்து விலை அதிகரிப்பு
சென்னை, ஜூன் 12- உளுத்தம்பருப்பு விலை கடந்தசில நாட்களாக அதி கரித்து வருகிறது. பருப்பு வகைகளில் உளுந்துதான் அதிக அளவில் விற்பனையாகும். இட்லி, தோசை போன்ற உணவு வகைகளுக்கு அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள். அதே போல் ஓட்டல்களி லும் பிரதான பொருளாக உளுந்து இடம் பிடித்துள்ளது. 100 கிலோ எடை கொண்ட உளுந்து ரூ.10 ஆயிரமாக இருந்தது. இப்போது ரூ.100 அதிகரித்துள்ளது. நேரம் துவரம் பருப்பு விலையில் மாற்றம் இல்லை.
அரசுக்கு எதிரான சொப்னா சுரேஷ் சதி வழக்கில் சரிதாவின் ரகசிய வாக்குமூலம் பெற முடிவு
திருவனந்தபுரம், ஜுன் 12- தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மீதான சதி வழக்கில் சரிதா எஸ் நாயரின் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட வுள்ளது. எஸ்ஐடியிடம் சாட்சி அளித்த வாக்குமூலம் ரகசிய வாக்குமூலமாக பதிவு செய்யப்படும். திருவனந்தபுரம் நடுவர் நீதிமன்றத்தில் சரிதாவின் 164 வாக்குமூலம் பதிவு செய்யப்படும். சொப்னா சுரேஷ் பிப்ரவரியில் இருந்தே சதி செய்தது தனக்கு தெரியும் என்றும் சொப்னாவுக்கு பாஜக ஆதரவா ளரான பி.சி.ஜார்ஜ் தான் சட்ட உதவி செய்து வருகிறார் என்றும் சரிதா கூறி யிருந்தார். பி.சி.ஜார்ஜை சொப்னா சுரேஷ் நேரில் சந்தித்து சதிதிட்டம் வகுத்ததாகவும் சரிதா வாக்குமூலம் அளித்துள்ளார். சொப்னா சுரேஷிடம், தான் பேசியதில்லை என்றும் சரிதா கூறியுள்ளார். முன்னதாக பி.சி.ஜார்ஜூக்கும் சரிதா நாயருக்கும் இடை யேயான தொலைபேசி உரையாடல் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சரிதா சாட்சியாக சேர்க்கப் பட்டார். சரிதாவின் வாக்குமூலம் முக்கியமானது. இந்த வழக்கில் முதல் முறையாக ஒருவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
போடியில் பாம்பு கடித்து முதியவர் பலி
தேனி, ஜூன் 12- தேனி மாவட்டம், போடி காமணன் தெருவை சேர்ந்த வர் ராஜேந்திரன் (60). இவர் விவசாயி. இவரது மகள் முத்து லட்சுமிக்கு போடி முத்துக் கோம்பை புலத்தில் மாந்தோட் டம் உள்ளது. இங்கு தங்கி தோட்டத்தை ராஜேந்திரன் பரா மரித்து வந்தார். சனிக்கிழமை இரவு தூங்கும் போது பாம்பு ஒன்று ராஜேந்திரனை கடித்துள்ளது. இது குறித்து ராஜேந்திரன் தனது மகன் கருப்பையாவுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் தோட்டத்தில் சென்று மயங்கி கிடந்த ராஜேந்தி ரனை காரில் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கருஞ்சாரை பாம்பு ராஜேந்திரனை கடித்தது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பையா போடி குரங்கணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மருந்து கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் போடியில் ஒருவர் கைது
தேனி, ஜூன் 12- போடியில் ஞாயிறன்று, மருந்து கடை உரிமையா ளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலையில் மருந்து கடை வைத்து நடத்தி வருபவர் தம்பிராஜ் (70). இவரது மருந்து கடைக்கு மருந்து வாங்க வந்த போடி நகராட்சி காலனி யை சேர்ந்த கண்ணன், வடிவேல் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தம்பிராஜ் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். வடிவேலுவை தேடி வரு கின்றனர்.
தேனி மாவட்டத்தில் கந்துவட்டி புகார் மீது உடனடி நடவடிக்கை எஸ்பி அறிவிப்பு
தேனி, ஜூன் 12- தேனி மாவட்டத்தில் கந்துவட்டி புகார் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையை தடுக்கும் வகை யில் ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் அதிரடி நட வடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கந்துவட்டிக் கொடுமையை தடுக்கும் பொருட்டு கந்துவட்டி தொழில் செய்வோர் மீது நிலுவை யில் உள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கந்துவட்டி யால் பாதிக்கப்பட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம். அந்த மனுக்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்க்கு மீண்டும் பணி
தேனி, ஜூன் 12- அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணி வாய்ப்பு பெற விண்ணப் பிக்கலாம் தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை தற்போது மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை உறுதித்திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணி யில் ஈடுபட தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது. இந்த பணிக் கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம், கிராம ஊராட்சி பணிகளுக்காக ரூ.2,500 என மொத்தம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப் படும். எனவே, 2011-ம் ஆண்டு பணி இழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள், இந்த பணியில் ஈடுபட விருப்பம் இருந்தால் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ள வேண்டும். இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஏற்கனவே பணியாற்றியதற்கான விவரத்துடன், பணியில் ஈடுபடவுள்ளதற்கான விருப்ப கடிதத்தையும் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை வழங்க லாம். அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்ப வர்களின் விருப்ப கடிதம் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு பாஜக நிர்வாகிக்கு ஜூன் 24 வரை சிறை
அருப்புக்கோட்டை, ஜூன் 12- அருப்புக்கோட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதாகியுள்ள தனியார் நர்சிங் கல்லூரி தாளாளரும் பாஜக நிர்வாகியுமான தாஸ்வின் ஜான் கிரேசுக்கு வரும் ஜூன் 24 வரை சிறையில் இருக்க வேண்டு மென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை தெற்கு தெருவில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கழிப்பறை உள் ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இக்கல்லூரியின் தாளாளராக இருந்து வருபவர் பாஜக சிறுபான்மை பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ். இவர் அங்கு படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் ரீதி யான தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், கைப்பேசி மூலம் ஆபாச படங்க ளையும் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, சக மாணவிகளி டம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அனைத்து மாணவி களும் ஒன்றுசேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, பாஜக நிர்வாகி தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டார். பின்பு, போலீசார் அவரை திருவில்லி புத்தூரில் உள்ள தீண்டாமை வன் கொடுமை தடுப்பு சட்ட நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து, தாஸ்வின்ஜான்கிரேசை வரும் ஜூன் 24 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்த ரவிட்டார். பின்பு போலீசார் அவரை விருதுநகர் மத்திய சிறையில் அடைத்த னர்.
விருதுநகர் அருகே இரட்டை கொலை: ஒருவர் கைது
விருதுநகர், ஜூன் 12- விருதுநகர் அருகே தடங்கம் கிராமத்தில் உள்ள கண்மாய் அருகே இருவர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் அருகேயுள்ள தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன குமார் (23). மணிகண்டன் (17). நண்பர்களான இவர்கள் இருவரையும் கடந்த ஜூன் 10 அன்று இரவு மர்ம நபர் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து, உயிரிழந்தோரின் பெற் றோர்கள் வச்சக்காரப்பட்டி காவல் நிலை யத்தில் புகார் மனு அளித்தனர். அதில், அதே ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பொ. மணிகண்டன் என்பவருக்கும் தனது மகன் களுக்கும் முன்விரோதம் இருந்தது. எனவே, அவர் இந்த கொலையை செய்தி ருக்கக் கூடும் என அதில் தெரிவித்திருந்த னர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில், பூசாரிபட்டி விலக்கு அருகே பொ.மணிகண்டன் (27) பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார், அங்கு பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசார ணையில், கொலையான நபர்கள் இரு வரும் கண்மாய் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது அங்கு வந்த மணி கண்டன் அரிவாளைக் கொண்டு அடுத்த டுத்து இருவரையும் வெட்டிப் படுகொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், இக்கொலைகளுக்கு யாரும் உடந்தையாக இருந்தனரா? மணிகண்டன் தப்பிக்க யாரும் உதவி செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உபரி நிலங்களை நிலமற்றவர்களிடம் ஒப்படைத்திடுக! விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை
பழனி, ஜூன் 12- அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் தொப்பம்பட்டி ஒன்றிய மாநாடு ஜூன் 12 அன்று தொப்பம்பட்டி யில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எம். பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே. அருள்செல்வன் துவக்கி வைத்துப் பேசினார். மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.பஞ்சலிங்கம் நிறைவுரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராமசாமி, என். கனகு, கே.சொக்கலிங்கம் வாழ்த்திப் பேசி னர். கே.பண்டரிநாதன் நன்றி கூறினார். மாநாட்டில் ஒன்றியத் தலைவராக கே. பண்டரிநாதன், செயலாளராக எம்.பழனிச் சாமி, பொருளாளராக உமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் திருவாண்டபுரம், சி. வேலம்பட்டி கிராமத்தில் ச. எ. 35/2 ல் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கோரிக்கடவு, வில்வாதம்பட்டி, வடுக வலசு, வேலூர், பருத்தியூர், மானூர், தொப் பம்பட்டி, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, தாளையூத்து, மாரப்பகவுண்டன்வலசு, நாகூர், கண்டியடகவுண்டன்புதூர், வய லூர், ஆகிய கிராமங்களில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். தும்பலப்பட்டி, பருத்தியூர், கோவிலம்மாபட்டி, தாளை யூத்து, குருவன்வலசு, ஆகிய கிராமங்க ளில் உபரி நிலங்களை முறையாக நில மற்ற ஒப்படை உத்தரவு வைத்துள்ளவர் களுக்கு ஒப்படைக்க வேண்டும். தாளை யூத்து, தும்பலப்பட்டி, சி.வேலம்பட்டி கண்டி யடகவுண்டன்புதூர் கிராமத்தில் குடிநீர், சாக்கடை, வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
‘சுமைப்பணித் தொழிலாளர்களின் வேலையை உத்தரவாதப்படுத்துக’
இராமநாதபுரம், ஜூன் 12- தமிழ்நாடு சுமைப்பணி தொழிலா ளர்கள் சம்மேளன மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன் தலை மையில் ஜூன் 12 அன்று இராமேசுவரத்தில் நடைபெற்றது. சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடபதி மற்றும் மாநி லக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஒன்றிய அரசு டீசல், பெட்ரோல், கேஸ் விலைகளைக் கட்டுக்குள் வைத்து, விலைவாசி உயர்வினை கட்டுப் படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு சுமைப் பணித் தொழிலாளர்களின் வேலைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்பைக் காட்டி சட்டத்திற்கு புறம்பாக சுமைப்பணித் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பறிக்கக்கூடாது என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத பகைமை கருத்து வெளியிட்டதற்காக சொப்னா சுரேஷின் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் மீது வழக்கு
கொச்சி, ஜுன் 12- சமூக வலைத்தளங்களில் மதப் பகைமை கருத்துக்களை பரப்பியதாக தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் வழக்கறி ஞர் கிருஷ்ணராஜ் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. கிருஷ்ணராஜ் மீது வழக்கு. கே.எஸ்.ஆர்.டி.சி ஓட்டுநரை மதரீதியாக திட்டியதாக அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் மத்திய போலீசார் கிருஷ்ண ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மே 25 ஆம் தேதி கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஓட்டுநரை அவதூறு செய்து முகநூலில் கிருஷ்ண ராஜ் பதிவிட்டுள்ளார். அதுகுறித்து அனூப் வி.ஆர் என்ற வழக்கறிஞர், கிருஷ்ணராஜ் மீது மாநகர காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள் ளார். அதன்படி மதநிந்தனை செய்து பகைமையை உருவாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா இராமநாதபுரம் ஆட்சியர் ஆலோசனை
இராமநாதபுரம்,ஜூன் 12- இராமநாதபுரம் மாவட் டம் ஏர்வாடி தர்ஹா ஷரீப் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவ லர்கள் மற்றும் ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் ஏர்வாடி தர்ஹாவில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட் டத்தில் ஊராட்சி சார்பில் குடி நீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற் படுத்தவும், போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதலாக உள்ளூர் பேருந்துகளை இயக்கவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவர்கள் தலைமையில் செவிலியர் கள் அடங்கிய குழு அமைத்து ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்க வும், காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு பணி யில் ஈடுபடவும், பொதுமக் கள் அனைவரையும் முகக் கவசம் அணிய அறிவுறுத்த வும் மாவட்ட ஆட்சித் தலை வர் சம்மந்தப்பட்ட அலுவலர் கள் மற்றும் ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப் பினர்களை கேட்டுக்கொண் டார். இந்நிகழ்வில் இராமநாத புரம் வருவாய் கோட்டாட்சி யர் சேக் மன்சூர் , கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் ,கட லாடி ஊராட்சி வட்டார வள ர்ச்சி அலுவலர் அண்ணாத் துரை உள்ளிட்ட அரசு அலு வலர்கள், ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப் பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து துன்புறுத்தப்படும் ஆண்டாள் கோவில் யானை
திருவில்லிபுத்தூர், ஜூன் 12- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான யானையை கொடூரமாக தாக் கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆண்டாள் கோவில் அருகே 2 கிலோமீட்டர் தொலைவி லுள்ள கிருஷ்ணன் கோவிலில் வைத்து கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. காலை பூஜைக்கு மட்டுமே அழைத்து வரப்பட்டு உடனடியாக திரும்ப அழைத்துச் செல்லப்படுவதாகவும் இதனால் பக்தர்கள் யானையை தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் யானை பராமரிக்கப்படும் இடத்தில் பாகன்கள் யானையை கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதன் அடிப்ப டையில் சில தனியார் சேனல்களில் செய்தி ஒளிபரப்பப் பட்டுள்ளது முதுமலை காப்பகத்தில் யானையை தாக்கிய தால் யானை பாகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதே நிலை நீடிப்பதாகவும் கோவில் நிர்வாகம் பாகன்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். யானை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிய கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் தொலை பேசி வாயிலாக பல முறை தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. நேரில் சென்ற போது அலுவலகத்தில் அவர் இல்லை. (ந.நி)
விருதுநகரில் சாலை விபத்தில் தந்தை கண் முன்னே மகள் பலி
விருதுநகர், ஜூன் 12- விருதுநகரில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 14 வயது சிறுமி உயிரிழந்தார். அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனது மகள் கீர்த்தனா (14) மற்றும் மகன் சுபிக்சனுடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். விருதுநகர் அருகே உள்ள 116 காலனி பகுதியில் வந்த போது, சாலையில் முன்னால் சென்ற கார் திடீரென மெதுவாக சென்றதாம். இதனால் குண சேகரன் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து லேசாக இரு சக்கர வாகனம் மீது மோதியதில் குணசேகரன் மற்றும் சுபிக்சன் இடதுபுறமாகவும் கீர்த்தனா வலது புறமாகவும் விழுந்துள்ளனர். இதில் பேருந்தின் பின்சக்கரத்திற்குள் சிக்கிய கீர்த்தனா கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விருதுநகர் கிழக்கு காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனரான அருப் புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த பாலகுரு என்பவரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் விற்க முயன்ற 2 பேர் கைது
நத்தம், ஜூன் 12- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்க ரன் உத்தரவின் பேரில் நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி செந்துறை பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் காவல் ஆய்வாளர் ர் ராஜசேகர் தலைமையி லான போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடை களுக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட் கள் வைத்திருந்த பிரான்மலை- பள்ளபட்டியை சேர்ந்த உது மான்(31), சூர்யபிரகாஷ் (27) ஆகிய 2 பேரை கைது செய்த நத்தம் போலீசார் அவர்களிடமிருந்து 10 கிலோ புகை யிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா இராமநாதபுரம் ஆட்சியர் ஆலோசனை
இராமநாதபுரம்,ஜூன் 12- இராமநாதபுரம் மாவட் டம் ஏர்வாடி தர்ஹா ஷரீப் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவ லர்கள் மற்றும் ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் ஏர்வாடி தர்ஹாவில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட் டத்தில் ஊராட்சி சார்பில் குடி நீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற் படுத்தவும், போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதலாக உள்ளூர் பேருந்துகளை இயக்கவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவர்கள் தலைமையில் செவிலியர் கள் அடங்கிய குழு அமைத்து ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்க வும், காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு பணி யில் ஈடுபடவும், பொதுமக் கள் அனைவரையும் முகக் கவசம் அணிய அறிவுறுத்த வும் மாவட்ட ஆட்சித் தலை வர் சம்மந்தப்பட்ட அலுவலர் கள் மற்றும் ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப் பினர்களை கேட்டுக்கொண் டார். இந்நிகழ்வில் இராமநாத புரம் வருவாய் கோட்டாட்சி யர் சேக் மன்சூர் , கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் ,கட லாடி ஊராட்சி வட்டார வள ர்ச்சி அலுவலர் அண்ணாத் துரை உள்ளிட்ட அரசு அலு வலர்கள், ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப் பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.