தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டுவிழாவில் சிவகங்கை மாவட்டம் முத்துபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கரோலின், மாலதி, காரைக்குடி மூ.வி. அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வி, வேதியரேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், திருபுவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமலர், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். பாராட்டு நிகழ்விற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.