தூத்துக்குடி, மே 1 தூத்துக்குடியில் மக்களின் பேராதரவை பெற்ற அற்புதம் மருத்துவமனை விரிவாக்கத்து டன் புதிய முகவரியில் பேராயர் தேவசகாயம் ஜெப ஆராதனை செய்து திறந்து வைத்தார். தூத்துக்குடி வி.வி.டி. சாலை யில் அற்புதம் மருத்துவமனை இயங்கி வந்தது. மக்களின் பேரா தரவை பெற்ற அற்புதம் மருத்து வமனை விரிவாக்கத்துடன் கூடிய புதிய முகவரியில் ஞாயிற்றுக் கிழமை தேவர்புரம் சாலையில் தென்பாகம் காவல் நிலையம் பின்புறம் திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி - நாசரேத் திரு மண்டல பேராயர் தேவசகாயம் ஜெப ஆராதனை செய்து அற்பு தம் மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திண் டுக்கல் சிட்டி மருத்துவமனை நிறு வனர் டாக்டர். ஆர்.முரளிதரன், திண்டுக்கல் அரசன் குழும சேர் மன் டி.உலகுடைய சிவராஜா ஆகியோர் முன்னிலை வகித்த னர். திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் டாக்டர்.ஜேஸ்லின் ஜேம்ஸ் வரவேற்றார். திறப்பு விழாவில், தூத்துக் குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங், அற்பு தம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஜூலியஸ் ஆம்ஸ்ட்ராங், நிர்வாக அதிகாரி ஜெபன், மேலாளர் ரூபன், சிபிஎம் சார்பில் மாவட்ட செய லாளர் கே. பி.ஆறுமுகம், மாநகர் செயலாளர் தா.ராஜா, மாவட் டக்குழு உறுப்பினர் எம்.எஸ். முத்து, திருமண்டல பொறுப்பா ளர்கள், மருத்துவ துறையில் சாதனை புரிந்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிர முகர்கள், தொழிலதிபர்கள், வணிக பிரமுகர்கள், வாடிக்கை யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அற்புதம் மருத்துவமனை யில் நவீன மருத்துவ உபகர ணங்கள், கூடுதல் படுக்கை வசதி கள், சிறப்பு மருத்துவர்கள் என ஆரோக்கியமான குடும்பங் களை உருவாக்குவதன் நோக் கத்துடன் மருத்துவ சேவைப் பய ணத்தை தொடங்கி உள்ளோம் என்று அற்புதம் மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநர் ஜூலி யஸ் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார்.