districts

img

பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறல்: மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  பெண்ணிடம்  பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையின்போது மருத்துவர் சக்கரவர்த்தி  பெண் ஒருவரிடம்  தவறாக நடந்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவ துறை ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை  சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் உள்ளே பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கிட வேண்டும். தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணியாளர்கள் லஞ்சம் பெறுவதை அதேபோல் பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஏற்படும் புகாரினை மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட செயலாளர் ஆர். சசிகலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டனர்.

;