மதுரை, ஜூன் 24- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் ஒன்றிய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? நலத்திட்டப் பயன் கள், பயனாளிகளுக்கு சென்று சேருகிறதா? என்பதை அறிந்து கொள்ளவும், கிராமப்புற மக்களின் குறைகளைக் கேட்டறியவும் மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிரா மங்களுக்கு சமீபத்தில் சென்று வந்தார். பூசாரி பட்டி கிராமத்திற்கு முன்னதாகவே வருகை தந்திருந்தார் கூடுதல் ஆட்சியர் சரவணன், மேலூர் வட்டாட்சியர் இளமுருகு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூடுதல் ஆட்சியர் சரவணன் பூசாரிபட்டி யில் உள்ள சதுர்மடங்கன் நியாயவிலைக் கடையைப் பார்த்தார். அதன் வாசலில் போடப் பட்டிருந்த சிமெண்ட் தளம் இடிந்து கிடந்தது. ஊழியர் ஒருவரை அழைத்த சரவணன், “இதை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என்றார். ஊழியர் ரூ.4 ஆயிரம் ஆகும் என் றார்”. இதையெல்லாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், கூடுதல் ஆட்சியர் வந்து பார்த்துத் தான் சரி செய்ய வேண்டுமா? கடையை சீர மைத்து உடனடியாக புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்றார். பூசாரிபட்டியில் மின் விநியோகம் சீராக இல்லை. கூடுதல் மின்மாற்றி அமைக்க வேண் டும். எப்போது மின்சாரம் வரும், போகும் எனத் தெரியாது என்றனர் கிராம மக்கள். இப் பிரச்சனையை தீர்க்க கூடுதல் ஆட்சியர் சர வணன் உத்தரவிட்டார்.
மேலூர் ஒன்றியத்தில் பூசாரிபட்டி, நர சிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் சீராக இல்லை. இதில் மின்வாரியம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து அவர் மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசனுடன் இணைந்து பூசாரி பட்டியில் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கிழக்கு தாலுகாவிற்கு உட்பட பரம்பகண் மாயில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை யை பார்வையிட்டனர். ரூ. 210 கூலி வழங்கு கின்றனர். வேலை தொடர்ந்து வழங்குவதில் பிரச்சனை உள்ளது என்றனர். மேலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பல்வேறு ஊராட்சிகளுக்கு வந்திருந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம், முதியோர் உதவித் தொகை வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் கவுன் சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் உடனடி யாக பரிசீலிக்கப்பட்டது. உடன் வந்த அரசு அதிகாரிகள், எந்ததெந்தப் பணிகளை உடனடி யாக நிறைவேற்ற முடியும். எந்தத் திட்டத்தில் பணி முடிக்கப்படும். திட்ட மதிப்பீடு எவ்வ ளவு, எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளப் படும் என்பதை உடனடியாகத் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தெரிவித்த விவரங்களையும் மக்களவை உறுப்பினர் பதிவு செய்து கொண் டார். சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஊராட்சி களில் திரண்டிருந்த மக்களிடம் பேசிய சு. வெங்கடேசன், ஊராட்சி ஒன்றிய அதிகாரி கள் உங்கள் கிராமங்களில் நிறைவேற்றப் படும் கோரிக்கைகள் குறித்து உறுதியளித் துள்ளனர். அப்பணிகளை மக்களும் கண்கா ணிக்க வேண்டும். இதில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். பணிகள் தாமதமின்றி நிறைவேற நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்றார். அரிட்டாபட்டியில் 92 வயது நிரம்பிய ஊராட்சித்தலைவரை சந்தித்து அங்கு நிறை வேற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கேட்ட றிந்தார். சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற ஒவ் வொரு அதிகாரியும் உளப்பூர்வமாக பணி யாற்றினர் என்றால் அது மிகையல்ல. இதே வேகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றி னால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். மக்களவை உறுப்பினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, இடைக்கமிட்டி செய லாளர்கள் எம்.கண்ணன். கலைச்செல்வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் த.செல் லக்கண்ணு, செ.முத்துராணி, எஸ்.கார்த்திக் மற்றும் எம்.கண்ணன், வி.அடக்கிவீரணன், ஜெயராமன், எஸ்.பி.மணவாளன், சி.அடைக் கன், பி.எஸ்.இராஜாமணி, வள்ளாலபட்டி பேரூராட்சி தலைவர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
‘விறகு வெட்ட முடியல,சிலிண்டர் விலையை குறையுங்கள்’
சு.வெங்கடேசன் எம்.பி., பெரியசூரக் குண்டு கிராமத்தில் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் வேகமாக வந்து, எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கி றது. வயதும் ஆகிவிட்டது. விறகு வெட்டவும் முடியவில்லை. எரிவாயு விலையைக் குறை யுங்கள் என்றார். அப்போது நீங்கள் என் சட்டையைப் பிடிக்காத குறையாக கேட்கி றீர்கள். விலை குறைப்புக்காகத்தான் போராடு கிறோம். நீங்கள் எந்த உணர்வோடு பிரச்சனை யை முன் வைத்தீர்களோ அதே உணர்வை நிச்சயம் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கி றேன் என்றார். அரசு நிர்வாகம் விரைவாகச் செயல்பட் டால் எதிர்வரும் ஆறு மாதத்தில் மக்களவை உறுப்பினர் முன்னிலையில் கிராம மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேறும். அதற்குத் தேவை ஆத்மார்த்தமான, அர்ப்ப ணிப்புமிக்க பணிதான்.