போதைப் பழக்கத்திற்கு எதிராக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 566 மாணவ -மாணவிகளுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தேனி ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே, துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பார்த்திபன், பெரியசாமி, ராமலிங்கம், மருத்துவக் கல்லூரி முதன்மையர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன், சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.