தேனி,மார்ச் 4- தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் 177 வார்டுகள் உள்ளன. இரண்டு பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 175 வார்டுகளுக்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்கள் கடந்த 2-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டனர். வெள்ளியன்று தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு தலைவராக ரேணுப்பிரியா, போடிக்கு ராஜராஜேஸ்வரி, சின்னமனூருக்கு அய்யம்மாள், கம்பத்திற்கு வனிதா, கூடலூருக்கு பத்மாவதி, பெரியகுளத்திற்கு சுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்ப ட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நகராட்சி துணைத் தலைவர்கள்
தேனி மாவட்டத்தின் 6 நகராட்சிகளிலும் திமுகவைச் சேர்ந்தவர்களே துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு செல்வம், பெரியகுளத்திற்கு ராஜாமுகமது, சின்னமனூருக்கு முத்துக்குமார், கம்பத்திற்கு சுனோதா, கூடலூருக்கு காஞ்சனா, போடிக்கு கிருஷ்ணவேணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.