பழனி, மார்ச் 13- பழனி நகரின் மையப்பகுதியில் அமைந் துள்ள வையாபுரி குளத்தை சீரமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருஆவினன்குடி கோயில் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வையா புரிகுளம். பங்குனி உத்திரம் திருவிழாவின் போது பக்தர்கள் கோவில் பிரசாதமாக தீர்த்த குளத்து நீரை எடுத்துச் செல்வதை வழக்க மாகக் கொண்டிருந்தனர். மானூர், கோதை மங்கலம், அய்யம்புலி உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் உள்ள மற்ற குளங்களுக்கு தண்ணீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக இந்தக் குளம் உள்ளது. 2012-ஆம் ஆண்டு இந்தக்குளத்தில் படகுச் சேவை நடைபெற்றது. பின்னர் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனா லும், பல ஆண்டுகளாக, ஆக்கிரமிப்புகள் மற்றும் சாக்கடைக் கழிவுகளால் வையா புரி குளம் முகத்தோற்றத்தை இழந்தது. இந்தக் குளத்தில் ஆகாயத்தாமரைகள், சீமைக்கருவேல மரங்களும் மற்றொரு புறத் தில் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் வையாபுரி குளத்தை நம்பியுள்ள விவசாயிகள், தன்னார்வலர் கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியா ளர்கள் மற்றும் பழனி பேரூராட்சிப் பணியா ளர்கள் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் கிடந்த பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் உள்ளிட்ட 50 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. குளத்தை தூய்மைப்படுத் தும் பணி தொடரும் என தகவலறிந்த வட்டா ரங்கள் தெரிவித்தன. வையாபுரி குளத்தில் கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் நிலு வையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.