சிவகங்கை, பிப்.27- சிவகங்கை மாவட்டம், வேம்பத் தூர் கிராமத்தை சேர்ந்த போக்கு வரத்து தொழிலாளி யின் மகள் ராகவி. இவர் வேம்பத்தூரில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து, 492 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் சிவகங்கையில் உள்ள 21 ஆம் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில், 12-ஆம் வகுப் பில் 1,116 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதனால், மருத்துவர் கனவில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றா லும் அரசு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் அதற்குரிய கட்டணம் கட்டுவ தற்கு வசதி இல்லாததால் செல்லவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 518 மதிப்பெண் கள் எடுத்துள்ளார். ஆனால், இவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான மருத்துவக் கல்லூ ரியில் ரேங்க் பட்டியல் 57ல் ராகவி உள்ளார். ரேங்க் பட்டியல் 54 ல் முடிந்துவிட்டது. ரேங்க் பட்டியலில் 54க்குள் உள்ள ஆறு பேருக்கு பல மாவட்டங்களில் அரசு மருத்து வக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த 6 பேரும் அங்கு சேர்ந்தால் ராகவிக்கு வாய்ப்பு வரும் என்று அந்த பட்டியலையும் பதி விட்டுள்ளார். இல்லையென்றால் தனியார் மருத்து வக் கல்லூரியில் சேர்வதற்கு அதற்குரிய செலவினங்களை ஸ்பான்சர் செய்கிற வாய்ப்பு இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று ராகவி கூறினார். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தனக்கு உதவி செய்வார்கள் என்று மாணவி ராகவி எதிர் நோக்கி உள்ளார். ராகவி செல் எண் 63792-84606