districts

img

ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடக்குமா?

மதுரை, ஜன.6- இரவுநேர ஊரடங்கு, ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு அறி விப்பால் ஜல்லிக்கட்டுப் போட்டி களும், பிரதமர் மோடி 12-ஆம் தேதி நடக்கும் பொங்கல் விழா வும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. ஒமைக் ரான் தொற்றும் மற்றொருபுறம் பரவி வருகிறது. இதனால் தற் போது தமிழக அரசு புதியக் கட் டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் விருதுநகர், மதுரைக்கு பிரதமர் மோடி வரு கிறார். தொடர்ந்து 14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் பொங்கல் பண் டிகை அவனியாபுரம், பால மேடு, அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடக்கிறது.  ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் அன்று நடந்து வந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் சனிக்கிழமையன்று நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, விருதுநகர் வரும் பிரத மர் மோடியின் வருகை எந்தள வுக்கு உறுதியாகும் என்பது தெரி யவில்லை. மேலும், பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிகள், அதை யொட்டி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்குமா? அல்லது ரத்தாகுமா? என்பது தற்போது வரை உறுதி செய்யப்பட வில்லை.  ஆனால், செவ்வாயன்று வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் நடத்தப் படும் என்று கூறியிருந்தார்.  ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வரும் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உல கப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அன்று முழு ஊரடங்காகும்.  இதற்கிடையில் ஜல்லிக் ட்டுப் போட்டிகள் நடத்துவது பற்றி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கூட்டம் நடை பெறவிருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. தமிழக முதல்வர் கூறுவதென்ன? பொங்கல் தொடர்பான நிகழ்ச்சிகள்-கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறு வனம் புதன் மாலை தெரிவித் துள்ளது.