இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை திருவில்லிபுத்தூர், பிப்.1- திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரம் அத்தி கோயில் பகுதி யில் ஆயிரக்கணக்கான ஏக்க ரில் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு உள்ளிட்ட வைகள் வளர்க்கப்படுகின்ற னர். தென்னை விவசாயம் என்பது பிரதானமாக நடை பெற்று வருகிறது.இப்பகுதி யில் உள்ள விவசாய நிலங்க ளுக்குள் வனவிலங்குகள் அடிக்கடி நுழைந்து தென்னை, மா, பலா,வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் திங்க ளன்று இரவு அத்தி கோயில் பகுதியில் ராமசாமி என்பவ ருக்கு சொந்தமான தோப் பிற்குள் புகுந்த காட்டு யானை கள் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன. தென்னை குருத்துகளை மட்டுமே சாப்பிட்டு விட்டு சென்ற யானைகள் சமீப கால மாக மரங்களை வேரோடு பிடுங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக விவ சாயிகள் கவலையுடன் தெரி வித்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித நட வடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அச்சம் தெரிவிக்கும் விவ சாயிகள், இலவசமாக மின்வேலி அமைத்துத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண் டும் என்றும் கோரிக்கை விடுத் துள்ளனர்.