districts

மதுரை முக்கிய செய்திகள்

மாதர் சங்க புதிய கிளை அமைப்பு 

தென்காசி, நவ. 3 செங்கோட்டை தாலுகா தேன் பொத்தை ஊராட்சி யில்  மாதர் சங்ககிளை  அமைக்கப்பட்டது .  கிளைத் தலைவராக திருவளர்செல்வியும் செயலாளராக  செல்வியும், பொருளாளராக கடல்கனியும் தேர்வு செய் யப்பட்டனர். மாவட்டத் தலைவர் ஆயிஷா, மாவட்ட நிர்வாகி பாரதி  தாலுகா செயலாளர் கணபதி தாலுகா தலைவர் மல்லிகா மற்றும் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

காட்டு பன்றிகள் அட்டகாசம் - வாழைகள் நாசம்

திருநெல்வேலி, நவ. 3- களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர்.  இந்நிலையில் இப்பகுதியில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். புதன்கிழமை இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுப் பன்றி கள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்தன. இதனை  பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில்  ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் கூட்டம் நாலாபுறங்களிலும் இருந்து நுழைந்ததால் விவசாயிகள் திணறினர்.மேலும் விவசாயிகளை நோக்கி ஓடி வந்ததால் உயிருக்கு பயந்து விவசாயிகள் பின்வாங்கினர். அதற்குள் பன்றி கள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட  ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை நாசம் செய்தன. இவைகள் மஞ்சுவிளையை சேர்ந்த சில்கிஸ், பிரேட் செல்வின், தங்கராஜ், பாக்கியராஜ், ராஜ், முத்துக்குடி, ஜேம்ஸ் சுந்தர், லுர்கின் ஐசக் உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். பன்றிகள் அட்டகாசத்தால் விவசா யிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காட்டு பன்றிகள்  அட்டகாசத்தை தடுக்கவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லையில்  மாயமான பள்ளி மாணவர்கள் 2 பேர் சென்னையில் மீட்பு  24 மணி நேரத்தில் காவல்துறை நடவடிக்கை

 திருநெல்வேலி, நவ. 3- நெல்லை, பாளை பகுதியில் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் டியூசனுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர். இரவில் வெகுநேரமாகியும் அவர்கள்வீடு திரும்பவில் லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாளை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  அதன்பேரில் நெல்லை மாநகர துணை ஆணையர் சீனிவாசன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் பிரதீப்  மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் வாசிவம், துணை காவல் ஆய்வாளர் சண்முகமூர்த்தி மற்றும் தலைமை காவலர் நவராஜ் ஆகியோர் காணாமல் போன மாணவர் கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மாண வர்கள் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து சென்னை சென்ற காவல் துறையினர் 24 மணி நேரத்திற்குள் மாணவர்களை மீட்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த விரைவான செயலுக்கு நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.

காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தூத்துக்குடி,நவ.3  திருச்செந்தூர் ஒன்றியம், வீரபாண்டியன் பட்டினம் ரூரல் பஞ்சாயத்து பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராததை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஏற்படுத்த கோரி யும்நவம்பர் 2 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுவாமி நாதன் தலைமையில், சமாதான கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை அலுவலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  முத்துக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வி, மூத்த தோழர் பன்னீர்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிவதாணுதாஸ், கணேசன், உடன்குடி ஒன்றிய செயலாளர் வே.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  சமாதான கூட்டத்தில்  ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி கூறினார்கள். இதனை ஏற்று  போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர்  ஆய்வு

தூத்துக்குடி,நவ.3 தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தேசிய நலவாழ்வு குழுமம் செயல்பாடுகள் குறித்து தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தலைமையில், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  முன்னிலையில் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், இணை இயக்குநர் நலப்பணிகள் கற்பகம், இணை இயக்குநர் தேசிய நலக்குழுமம் ம.கிருஷ்ணலீலா, மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு கண்காணிப்பாளர் எம்.மதுசூதனன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி செவிலியர் கல்லூரி முதல்வர் கலைவாணிகலந்துகொண்டனர்.