districts

img

பணியின் போது மின்சாரம் தாக்கி கணவர் பலி அரசுப் பணி வழங்க மணைவி கோரிக்கை

தேனி, பிப்.6- மின்வாரியத்தில் தற்காலிகப் பணியா ளராகப் பணிபுரிந்த கணவர்,பணியின் போது மின்சாரம் தாக்கி பலியானார்.ஆதர வற்ற நிலையில் இருக்கும் தனக்குச் சத்துணவு அமைப்பா ளர் பணி வழங்க வேண்டுமென அவ ரது மனைவி தேனி ஆட்சியரிடம் மனு அளித்தார். கம்பம் அருகே உள்ள நாராயணத் தேவன் பட்டியைச் சேர்ந்த அஜித் மனைவி அ.வீரம்மாள் தேனி ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். “மனுவில் எனது கண வரும் நானும் காதலித்து 2018-ஆம் ஆண்டு  ஜுலை மாதம் 12-ஆம் தேதி கம்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கலப்புப் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம் இருவீட்டிலும் எங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனது கணவர் காமயகவுண்டன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக மின் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி அன்று  காலை காமயகவுண்டன்பட்டி கஸ்தூரி பாய் பள்ளிக்கு எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி  கீழே விழுந்து அதே இடத்தில் உயிரி ழந்தார் அவர் இறந்த பின்பு நான் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து யார் ஆத ரவுமின்றி சிரமத்துடன் வாழ்ந்து வரு கிறேன்.  எனக்குத் தேவன்பட்டி கள்ளர் பள்ளியில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.