districts

மாணவரின் உடல்நல விவரங்களை சேகரிப்பது ஏன்? - விளக்கம்

சென்னை,மார்ச் 12- அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியே உடல்நலம் சார்ந்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சுய  விவரங்கள், கல்வி சார்ந்த பல்வேறு தகவல்கள் பள்ளிக் கல்வி  மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான நலத் திட்டங்கள், கற்றல் செயல்பாடுகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிடையே, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி மாணவர்கள் உடல்நலம் சார்ந்த தகவல்களையும் திரட்டி எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 8 ஆம் தேதி நடந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அந்த  வகையில், மாணவர்களிடம் 8 பிரிவுகளில் 64 கேள்விகளுக்கு பதில்  பெற்று பதிவு செய்யுமாறு ஆசிரியர்களுக்கு தற்போது உத்தர விடப்பட்டுள்ளது. அதில், மாணவர்களின் உணவு பழக்கங்கள், கால்கள் அல்லது பாதம் வளைந்துள்ளதா, உயரம், எடை குறைவாக உள்ளனரா, சத்துணவில் பிடித்த உணவு, கண் பார்வை குறைபாடு உள்ளதா, பான்,  ஜர்தா போடும் பழக்கம் உள்ளதா, பல் சிதைவு, ஈறு நோய்இருக்கிறதா, சிறுநீர் கழிக்கும்போது ஏதேனும் தொந்தரவு உள்ளதா, மாணவிகளின் மாதவிலக்கு தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாணவி களின் மாதவிலக்கு குறித்த தகவல்களை சேகரிப்பது ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.