காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை முறையாக பராமரிக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை, அக்.21- காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு களை முறையாக பராமரிக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த உலகஜோதி நூர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘எனது மகன் சையது இஸ்மா யில், இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மாவட்ட அளவிலான கைப்பந்து வீரரான இவர் மீது மதுரை காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சென்னை யில் வேலை பார்த்து வந்த எனது மகன் செப்டம்பர் 3-ஆம் தேதி விடுமுறையில் மதுரை வந்தார். செப்டம்பர் 4 அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மதுரை காவல்துறை ஆணையரின் சிறப்பு பிரிவில் உள்ள உதவி ஆய்வாளர் சிவா, காவ லர் காமராஜ் உள்ளிட்ட சில காவலர்கள் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து என் மகனை கைது செய்தனர். எனது செல்போனையும் பறித்து சென்றனர். இதனையடுத்து எனது மகனின் நண்பர்களான சேக் முகம்மது, விஜய், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த செயல், மனித உரிமை மீறலாகும். எனவே எனது மகன் உள்ளிட்டவர்களை சட்டவிரோத மாக அடைத்து வைத்து தாக்கியது தொடர்பான விசார ணைக்காக, மதுரை மாநகர பழைய காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் கரிமேடு காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தர விட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் சனிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது அலி ஜின்னா, மனுதாரர் மகன் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் சட்ட விரோதமாக தாக்கி உள்ளனர். இது சம்பந்தமான சாட்சிகளை விசாரிப்பதற்கு வசதியாக காவல் நிலைய கண்காணிப்பு கேமராக்கள் பதிவு அவசியமாகிறது. இதை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அப்போது, காவல் நிலையத்திலும் பழைய காவலர் ஆணைய அலுவலகத்திலும் சிசிடிவி கேமராக்கள் உள்ள னவா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை தரப்பில், மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சிசிடிவி-யின் ஹார்ட் டிஸ்க் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கூறுகையில், முறையாக சிசிடிவி கேமராக்கள் அனைத்து காவல் நிலையங்களும் இருக்க வேண்டும், அதனை முறை யாக பராமரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில் எவ்வாறு இதுபோன்று பதிலளிக்கி றீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து மதுரை பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை மனுதாரர் கோரும் சம்பவ நாளன்று பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் திறப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
நீளம் தாண்டுதல் போட்டி: திண்டுக்கல் மாணவர் முதலிடம்
திண்டுக்கல். அக்.21- திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளி மாண வர் ஜித்தன் அர்ஜூணன் வாராங்கல்லில் நடந்த 34-ஆவது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி யின் 14 வயது பிரிவு நீளம் தாண்டுதல் போட்டியில் 7. 39 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் கோவையில் நடைபெறும் நீளம் தாண்டு தல் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரை மாவட்ட கால்பந்து செயலாளர் சண்முகம், ஹாக்கி சங்க நிறுவனர் ஞானகுரு, மாவட்ட தடகள சங்க தலைவர் துரை ரத்தினம், செயலாளர் சிவகுமார், பள்ளி தாளாளர் பரம சிவம், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் சித்ரா, உடற்கல்வி ஆசிரியர் பாண்டிய ராஜன் ஆகியோர் வாழ்த்தினர்.
7 பேருக்கு டெங்கு காய்ச்சல்
திண்டுக்கல், அக்.21- திண்டுக்கல் 7 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச் சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளியன்று 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக் கப்பட்டவர்கள் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் குறைந்து வரும் நீர்மட்டம்
தேனி, அக்.21- நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து விட்டது. நீர்வரத்தை விட கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த நான்கு நாட்க ளாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணை க்கு நீர்வரத்து குறைந்து வரு கிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி முல்லைப்பெரி யாறு அணையின் நீர்மட்டம் 123.50 அடியாக உள்ளது. நீர்வரத்து 980 கனஅடி நீர் வருகிறது. தண்ணீர் திறப்பு 1322 கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக உள் ளது. 1492 கனஅடி நீர் வரு கிறது. மதுரை மாநகர குடி நீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணை 54.70 அடி. அணைக்கு நீர்வரத்து 53 கன அடி.100 கன அடி திறப்பு. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 124.96 அடியாக உள் ளது. விரைவில் முழு கொள் ளளவை எட்டும். அணைக்கு 19.32 கன அடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு 3 கன அடி திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 38.80 அடி. நீர் வரத்து 10 கன அடி உள்ளது.
பழனியில் விவசாயி தற்கொலை
திண்டுக்கல், அக்.21- திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாறைப் பட்டியைச் சேர்ந்த கருப்பணன் மகன் சுப்ரமணி (59) விவ சாயி. இவர் கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்சனை கார ணமாக சுப்ரமணி மனமுடைந்து நிலையில், தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது. கீரனூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.