புதுதில்லி, ஜூலை 31- சமூக, அரசியல், பொருளாதார மற்றும் மதரீதியாக இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்ச னைகளுக்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?என்று நாடாளு மன்ற மக்களவையில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலை வரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ் கனி கேள்வி எழுப்பினார். மக்களவையில் கே.நவாஸ்கனி பேசுகையில், இந்திய முஸ்லிம்களை பாதிக்கும் பிரச்சனைகளை அடை யாளம் கண்டு ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கை கள் குறித்த விவரங்கள் மற்றும் இந்த பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இது சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நல்லதாகும் என்றார். இந்த கேள்விகளுக்கு சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபீன் இரானி எழுத்துப்பூர்வ மாக அளித்த பதிலில், முஸ்லிம்கள் உள்பட சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களின் நலம் மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY), பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி (PM KISAN), பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), பேட்டி பச்சோ பேட்டி பாதோ யோஜனா போன்றவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு அமல் படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் 10 சத வீத இடஒதுக்கீட்டு சலுகையை பொரு ளாதாரத்தால் நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த சிறுபான்மையினரும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
நயா சவேரா இலவச பயிற்சி மற்றும் அதனுடன் இணைந்த திட்டம் - தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வி களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வு களில் தகுதி பெறுவதற்காக சிறு பான்மையினர் சமூகத்தைத் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அபேச்ச கர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கம்.பதோ பர்தேஸ் - வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்க கல்விக் கடன்களுக்காக சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த மாண வர்களுக்கு வட்டி மானியம் அளிக்கும் திட்டம். வேலைவாய்ப்புகளை அளித்தல், கலைப்பொருட்கள் மற்றும் கை வினைப் பொருட்களை சந்தைப் படுத்து தல் ஆகியவற்றுக்காக நாடு முழு வதும் பாரம்பரிய கலைகள் / கை வினைப் பொருட்கள் மேம்பாட்டில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி அளித்தல் (USTTAD) மற்றும் ஹுனார் ஹாத் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதியை அளிப்பதற்காக பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியாக் ராம் திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து அமைச்சகம் 49 பட்டப்படிப்பு கல்லூரி கள், 179 உறைவிடப் பள்ளிகள், 3,016 பள்ளிக் கட்டடங்கள், 42,269 கூடுதல் வகுப்பு அறைகள் / நூலகங்கள் / சோத னைக் கூடங்கள் / அறைகள் போன் றவை, உள்ளிட்ட 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய திட்டங்களுக்கு இந்த அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.