சின்னாளபட்டி ஜூன் 22 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றி யம் செட்டியபட்டி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நலத் திட்டங்கள் முழுமையாக நிறை வேற்றப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சியில் ரூ.25.37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா, கல்லுப்பட்டியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதி;ப்பில் புதிய நாடக மேடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முரு கேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை பெருந்தலைவர் ஹேமலதா மணி கண்டன், ஒன்றிய செயலாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், தட்சிணா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வி.ராஜா வரவேற்று பேசினார். விழாவில் புதிய நாடக மேடை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், திமுக ஆட்சி நடைபெறும் காலங்களில் தான் செட்டியபட்டி ஊராட்சிக்கு நலத்திட்டங் கள் அதிகளவில் செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக கடந்த முறை திமுக ஆட்சியின் போது கல்லுபட்டி – வேளாங்கண்ணி புரத் திற்கு சாலை வசதி செய்து கொடுக்கப் பட்டது.அதன்பின்னர் அதிமுக ஆட்சி யில் 10 வருடங்களாக எந்த ஒரு நலத்திட்டங்களும் செயல்படுத்தவில்லை. தற்போது பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கள் கேட்டுள்ளார்கள். ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் ராஜாவும் மனு கொடுத்துள் ளார். விரைவில் புதிய வகுப்பறைகள் கட்டிக்கொடுக்கப்படும். செட்டியபட்டி ஊராட்சியில் உள்ள வேளாங்கண்ணிபுரம், கல்லுப்பட்டி, செட்டியபட்டி, இளையாழ்; வார்நகர், கேபிடி நகர், வளையபட்டி, விஜய நகரம், விநாயகபுரம் உட்பட 9 கிராமங்க ளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் 100 சதவீதம் கிடைக்கும் வகை யில் நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. விரைவில் வளையபட்டி முதல் சிறுமலை அடிவாரம் வரை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வரும் வகையில் 1 கோடியே 81 லட்சம் மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு ஊர் பொதுமக்கள் மேல தாளத்துடன் ஆரத்தி எடுத்து உற்சாக வர வேற்பு அளித்தனர். இதேபோல் பாறைப் பட்டி வண்ணம்பட்டியிலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.