திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி,நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அ.இளையேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.