ஒன்றிய பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்ட தமிழக விடுதலை போராட்ட வரலாற்று நாயகர்கள் வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி, மகாகவி பாரதி ஆகிய மாவீரர்களை தாங்கி வந்த அலங்கார ஊர்திக்கு மதுரை மக்களின் சார்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் மதுரை தெப்பக்குளம் அருகில் மலர்தூவி வரவேற்றனர்.