districts

img

செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மதுரையில் வரவேற்பு

மதுரை, ஜூலை 25- சென்னையில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில்  ஏற்றப்படவுள்ள ஜோதி கோயம்புத்தூரி லிருந்து திங்களன்று மாலை மது ரைக்கு வந்தது. மதுரை மீனாட்சி அம்  மன் கோவில் சித்திரை வீதியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன்,  ஊரகவளர்ச்சிதுறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதி வுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகி யோருடன் இணைந்து மாவட்ட ஆட்சி யர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர்  இந்திராணி, துணை மேயர் தி. நாக ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன்,  ஆ.வெங்கடேசன் ஆகி யோர்  ஜோதியை வரவேற்றனர். நிகழ்  வில் திண்டுக்கல் தேனி சிவகங்கை விருதுநகர் இராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பிக்கும் வகையில மதுரையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

பழனி

பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் செஸ் ஒலிம்  பியாட்டை சிறப்பிக்கும் வகையில் வட்  டார அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ஜோதி தலைமை வகித்தார். பழனி மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.