districts

மதுரை முக்கிய செய்திகள்

திருநெல்வேலி - தாம்பரம் இடையே வாராந்திர ரயில் சேவை

மதுரை, ஜூலை 26-  தென்காசி வழியாக திருநெல்வேலி- தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை  இயக்கப்பட்டது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும்  இந்த ரயில் ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் மாதம் வரை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி திருநெல்வேலி - தாம்ப ரம் வாராந்திர சிறப்பு ரயில் (06004) ஆகஸ்ட் 7 முதல்  செப்டம்பர் 4 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல் வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு  ரயில் (06003) ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 5 வரை  திங்கட்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20  மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு  மதுரைக்கும், காலை 10.35 மணிக்கு திருநெல்வேலியும் வந்து சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம்,  விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்  காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று  செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்ட டுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு  படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

இளம்பெண் பாலியல் வன்கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் 

மதுரை, ஜூலை 27- ஆற்றில் குளிக்க சென்ற இளம் பெண்ணை பாலியல்  வன்புணர்வு செய்ய முயன்று கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்ட னையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள கல்வெட்டாங்குழிக்குடைத்துகி பகுதியில் வசித்து  வரும் மணிகண்டன் கடந்த.2013 ஆண்டு விஜயதசமி நாளன்று பேச்சிப்பாறை அணை கால்வாயில் குளிக்கச் சென்ற அப் பகுதியை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார் .அந்த பெண்  கூச்சலிடவும் அதே கால்வாயில் தண்ணீரில் மூழ்கடித்து அப்பெண்ணை கொலை செய்துள்ளார்  இந்த வழக்கில்கிழமை நீதிமன்றம் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த வழக்கை நீதிபதி பி. என். பிரகாஷ் , ஹேம லதா அமர்வு புதனன்று விசாரித்து தீர்ப்பளித்தது..  தீர்ப்பில் , கால்வாயில் குளிக்கச் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது பெண் சப்த மிட்டதை அடுத்து இத்தகைய கொடூர கொலை சிறிதும்  இரக்கம்இன்றி செய்துள்ளார். கொலை செய்தற்கான சாட்சிகள், ஆதாரங்கள் மருத்துவர் வாக்குமூலம், மருத்து வச் சான்று தெளிவாக உள்ளது .இதன் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் ஆண்களின் இச்சைக்கு அடிபணியாததால் நிகழ்கின்றன பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிட்டது.. எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிக்கு தயவு  தாட்சண்யம் காட்ட எந்த முகாந்திரமும் இல்லை. ஆகை யால் இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்கிறது என்று தீர்ப்பளித்தனர்.

ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் மீது வழக்கு

தேனி, ஜுலை 27- தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர்  ஆர்பி.உதயகுமார் உள்ளிட்ட 3ஆயிரம் பேர் மீது தேனி  போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின்கட்டண உயர்வைக் கண்டித்து தேனியில் நேற்று  முன்தினம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் எதிர்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராள மான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் எவ்வித அரசு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கும் இடையூறு செய்ததாகக் கூறி தேனி அல்லிநக ரம் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரி தேனி காவல்  நிலையத்தில் புகார் கொடுததார். இதனடிப்படையில் எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ண குமார், கழக அமைப்புச் செயலாளர் எஸ்டிகே.ஜக்கையன்  உள்ளிட்ட 2ஆயிரம் ஆண்கள், ஆயிரம் பெண்கள் உள்  ளிட்ட 3ஆயிரம் பேர் மீது தேனி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 

ரயிலில் இருந்து தவிறிவிழுந்து முதியவர் பலி

திருவில்லிபுத்தூர், ஜூலை 27- மதுரை - செங்கோட்டை அகல ரயில் பாதையில் சிவ காசி -திருவில்லிபுத்தூர் இடையே ரயில் கேட் அருகில் முதியவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். திருல்லிபுத்தூர் இருப்பு பாதை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஸ்ரீராமுலு சம்பவ இடத்தில் விசாரனை நடத்தினார். இறந்த நபரின்  கையில் மணிராம் என இந்தியில் பச்சை குத்தப்பட்டுள்ள தால் வடமாநிலத்தவர் என்பது தெரியவந்தது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவரின் உடலில் உள்ள காயங்களை  வைத்து, ரயில் வண்டியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி

கடமலைக்குண்டு, ஜூலை 27- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. குறிப்பாக மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை பகுதியில் 2 மணி  நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி  தீர்த்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை 6 மணி யளவில் சிறப்பாறை கிராமத்தில் பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த சேனாதிபதி, ஈஸ்வரன், பழனி  ஆகியோர்களுக்கு சொந்தமான 3 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.

ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் பலி 

வெபம்பக்கோட்டை, ஜூலை - 27 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ளது வளை யப்பட்டி . இங்கு துலுக்கன்குறிச்சியை சேர்ந்த தவிட்டுராஜன் (48) என்பவருக்கு சொந்தமான முத்துமீனா பட்டாசு ஆலை செயல்பட்டு வரு கிறது.மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும்  இந்த பட்டாசு ஆலை 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வி னால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆலங்குளம் போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை யில் உயிரிழந்தவர் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் வயது 40 மற்றும் காயமடைந்தவர் வெம்பக்கோட்டை காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த பவானிஸ்வரன் என்பது தெரியவந்தது.

இலங்கையில் இருந்து  மேலும் 6 பேர் வருகை

இராமேசுவரம், ஜூலை 27-  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து மக்கள் தமிழகம் வருகின்றனர்.  தனுஷ்கோடி அரிச்சனை முனை பகுதிக்கு இரண்டு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அகதிகளாக புதன்கிழமை வந்தனர்.தகவல் கிடைத்து அங்கு சென்ற கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சார்பு ஆய்வா ளர் காளிதாஸ் மற்றும் காவல்துறையினர் சென்று 6 பேரையும் மீட்டு  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட னர். இதில் கிளிநொச்சியை சேர்ந்த நிமல்(47)யாழ்பாணம் பகுதியை  சேர்ந்த உதயகுமார்(49)இவரது மனைவி ரோஜா(38)மகள் விதுஷா (12) மகன் தனுசன்(10)மகன் கரிசன்(7) என்பதும் இலங்கையில் கடுமையாக உணவு தட்டுப்பாடு காரணமாக அகதியாக வந்ததாக தெரி வித்தனர். இதனைதொடர்ந்து, மண்டபம் கேம்ப் இலங்கை தமி ழர்கள் மறுவாழ்வு தனித்துறை ஆட்சியர் சிவகுமாரியிடம் ஒப்ப டைக்கப்பட்டனர்.

தோழர் ஆர் .சுப்ரமணி காலமானார் 

தேனி, ஜூலை 27- போடி வட்டம் ,மேலச்சொக்கநாதபுரம் சேர்ந்த மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆர்.சுப்ரமணி  (70) புதன்கிழமை அதிகாலை காலமானார். கட்சியின் கிளை செயலாளர், தாலுகாக் குழு உறுப்பினர், விவசாயி கள் சங்க தாலுகா தலைவர் என பொறுப்புகளில் இருந்து  திறம்பட செயல்பட்டவர். அன்னாரின் மறைவு செய்தி அறிந்து விவசாய தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு ,மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், விவசாயி கள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டியன், சிஐடியு தாலுகா செயலாளர் பி.சந்திரசேகர், மாதர் சங்க  தாலுகா செயலாளர் மீனா, விதொச தாலுகா செயலா ளர் காமராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து இறுதி  மரியாதை செய்தனர்.

விவசாயிகள் சங்க  தேனி தாலுகா மாநாடு

'தேனி, ஜூலை 27- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி தாலுகா  ஏழாவது மாநாடு தாலுகா தலைவர் வி.என்.ராமராஜ்  தலைமையில் நடைபெற்றது .மாநாட்டினை மாநிலக்குழு  உறுப்பினர் கே .ராஜப்பன் தொடங்கி வைத்து பேசினார்.  தாலுகா செயலாளர் வி .ராஜேந்திரன் வேலை அறிக்கை  சமர்ப்பித்தார். சகோதர சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்தி பேசினர். மாவட்டச் செயலாளர் டி .கண்ணன் மாநாட்டினை நிறைவு செய்து பேசினார். மாநாட்டில் தாலுகா தலைவராக வி.ராஜேந்திரன், செயலாளராக பொன்னுத்துரை, பொருளாளராக அப்பாஸ் மந்திரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக கே.பாஸ்கரன்,பி.செல்வ ராஜ் துணை செயலாளராக வி.என் .ராம்ராஜ், எம்.செல்வ ராஜ் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்வு செய்  யப்பட்டனர். பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தி யுள்ள ஒன்றிய அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம்  சாணார்பட்டி ஒன்றியம் கொசவபட்டியில் தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னராசு தலைமை வகித்தார். மாவட்ட துணைசெயலாளர் வெள்ளைக் கண்ணன், சங்கர், சின்ன ராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆக.1 இல் கச்சநத்தம்  கொலை வழக்கில் தீர்ப்பு

சிவகங்கை, ஜூலை 27- சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகில் கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள் மூன்று பேரை  கொலை செய்து 15 பேரை பலத்தக் காயமடையச் செய்த  சாதி ஆதிக்கச்சக்தியினரின் கோரத்தாண்டவம் தமிழ கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  படுகாயத்தால் உடல் நலிவடைந்து ஒரு வருடம் கழிந்து மேலும் ஒருவர் இறந்தார். 5 நபர்கள் கொடுங்காய முற்று ஊனமுற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். காவல்துறையின் புலனாய்வு முடிவடைந்து, குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டு ஜூலை 27 ஆம் தேதி தீர்ப்பு  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது ஆகஸ்ட் 1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த பெண் பலி

விருதுநகர், ஜூலை 27- விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலியை சேர்ந்த வர் கோபால். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மது பானக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி  சரஸ்வதி (48). இந்நிலையில், இவர் வீட்டில் ரத்த காயங்க ளுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரி தாபமாக உயிரிழநதார். இதுகுறித்து, விருதுநகர் ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெரிய பேராலி பகுதியில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சுரு ளீஸ்வரன் என்பவர், காலை முதல் பலரைத் தாக்கி காயப்  படுத்தியதாக தெரியவந்தது. எனவே, அவர் தான்  சரஸ்வதியையும் தாக்கியிருக்கலாம் என சுருளீஸ்வ ரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

இராஜபாளையம், ஜுலை 27- இராஜபாளையம் அருகே கோவிலூரைச் சேர்ந்தவர்  ஜேசு (38,) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வேலை  நிமித்தமாக தளவாய்புரம் வடக்கு மாரியம்மன் கோவில்  தெருவில் குடிபெயர்ந்துள்ளனர். இவருக்கு குடிப்பழக் கம் இருந்ததாகவும், இதனால் தீராத வயிற்று வலி  ஏற்பட்டு மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படு கிறது. யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது  மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

வன விவசாயிகளுக்கு பட்டா வழங்குக! கொடைக்கானல் விவசாயிகள் மாநாடு வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜுலை 26- வன பகுதி விவசாயிகளுக்கு வன  உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்க அரசு  முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் கொடைக்கானல் ஒன்  றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.  செவ்வாயன்று நடைபெற்ற எம்.செல்லையா தலைமை வகித்தார். விவசாயி கள் மாவட்டச்செயலாளர் என்.பெருமாள்,  பால் உற்பத்தியாளர் ச்க மாவட்டத்தலைவர் எம்.ராமசாமி, மலைவாழ் மக்கள் சங்க  மாவட்டச்செயலாளர், தா.அஜாய்கோஷ், சிஐடியு சார்பாக ஜோசப், சிபிஎம் சார்பாக  செந்தாமரை, சின்னு ஆகியோர் பேசினர்.  மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். ஒன்றிய தலைவராக ராஜேஷ், கண்ணன், செயலாளராக கே. முத்துச்சாமி, பொருளாளராக கோபிநாத், துணைத்தலைவராக எம்.செல்லையா, துணைச்செயலாளராக முருகானந்தம், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மலை விளை பொருட்களான பூண்டு, கேரட், காப்பி, வாழை, உருளை, ஆர்சு,  ஆகியவற்றிற்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்திட வேண்டும். மலை கிராம சாலைகளை செப்பனிட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மான்கள் நிறை வேற்றப்பட்டன.              (ந.நி.)

விருதுநகர் ஆட்சியரகத்தில் இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

விருதுநகர், ஜூலை 27- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 38 வயது பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் வந்தார். திடீரென தான் வைத்திருந்த மண்ணெண் ணெயை எடுத்து மூவர் மீதும் ஊற்றி தீவைக்க முயற்சித்துள்ளார். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு  பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மூவரையும் காப்பாற்றினர். இதை யடுத்து, மூவரையும் சூலக்கரை காவல் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அப்பெண், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்த சீதாலட்சுமி எனவும்,  கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு  பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்தார். இந்நிலை யில், அருப்புக்கோட்டையில் ஜவுளிக் கடை வைத்தி ருக்கும் கூத்திப்பாறையைச் சேர்ந்த பாலாஜி என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டதாம். கடந்த ஏப்ரல் மாதம் இரு வரும் திருமணம் செய்துள்ளனர்.   திருமணத்திற்கு பாலாஜியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை வலுக்கட்டா யமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, சீதாலட்சுமியை பாலாஜியை தேடிச் சென்றுள்ளார். அப்போது, பாலாஜியின் உறவினர்கள், கொலை  மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலை யத்தினர் சீதாலட்சுமி மீது பொய் வழக்கு போடுவ தாக மிரட்டுவதாக கூறி, புதன்கிழமை காலை, ஆட்சி யர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததாக விசாரணையில் தெரிய வருகிறது.