districts

img

எல்ஐசி பங்குகள் விற்பனையைக் கண்டித்து வத்தலக்குண்டு எல்.ஜ.சி கிளை அலுவலகம்

விருதுநகர், மார்ச் 10- விருதுநகர் மாவட்டத்தில் உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், சுயமரி யாதையுடனும், கண்ணியத்துடனும் தாங் களே எளிதாக பயன்படுத்தும் வகை யில், அவர்களது சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு, சமூக பொறுப்பு நிதியின்  ரூ.35 ஆயிரம் மதிப்பில் பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறை கள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங் கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார். இவர் மேலும் கூறியதாவது : கடந்த  7 மாதங்களில் 100 மாற்றுத் திறனாளி களுக்கு தனிநபர் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதில், விருதுநகர்  ஒன்றியம், குந்தலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரத்தை சேர்ந்த நந்தினி என்ற மாற்றுத்திறனாளிக்கு 100-ஆவது கழிப்பறை கட்டித் தரப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உத யம் என்ற சீரிய திட்டத்தினை தமிழக முதல் வரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்து செயல் படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி கள் பயன்படுத்தக் கூடிய வகையில் குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டும், மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி யாக வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு, மாற்றுத் திறனாளிகள்; எளி தில் பயன்படுத்தக் கூடிய வகையில் சக் கர நாற்காலியில் அமர்ந்து கழிப்ப றைக்குள்ளே செல்ல ஏதுவாக சாய்தள வசதி, சௌகரியமான முறையில் அமர மேற்கத்திய வடிவமைப்பிலான கழிப் பறை அருகிலேயே கம்பி வடிவிலான கைப்பிடிகள் மற்றும் அதிக இடவசதி ஆகியவற்றை உள்ளடக்கிய அம்சங்களு டன் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரி வித்தார். விருதுநகர் மாவட்டத்தில் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டிடம் தேவைப் படும் மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவல கத்தை அணுகி பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.