districts

மதுரை முக்கிய செய்திகள்

தேனியில் தனியார் மில்லில்  காவலாளி தூக்குபோட்டு தற்கொலை

தேனி ,நவ .5- தேனியில் தனியார் மில்லில் மில் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி சிவாஜி நகரில் வைகுண்டசாமி மில் உள்ளது. அந்த மில்லில் தேவாரம் அருகே மூனாண்டிபட்டியை சேர்ந்த மொக்கையன் மகன் குணசேகரன் (48) என்ப வர் காவலாளியாக இருந்து வந்தார் .இவர் வெள்ளிக் கிழமை தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது தொடர்பாக இவரது தந்தை மொக்கையன் கொடுத்த புகாரின் பேரில்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

100 பேர் குண்டர் சட்டத்தில் கைது 

தேனி, நவ.5- தேனி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு 100 பேர் குண்டர்  தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், தேனி மாவட்டத்தில் 1.1.2022 முதல் தற்போது வரை  கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள் 34 பேர் ,திருட்டு  மற்றும் கொள்ளை குற்றவாளிகள் 10 பேர் ,கொலை திருட்டு மற்றும் கொலை முயற்சி குற்றவாளிகள் 43 பேர், போக்ஸோ  வழக்கு மற்றும் மணல் திருட்டு வழக்கில் 3 என 100 பேர்  மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்  பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தரேவு கிராமத்தில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள்  சென்று வழிபட அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ.5- சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் காவளபட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தரேவு கிராமத்தில்  கிராமத்தில் உச்சி காளியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவிலில் பொது மக் கள் வழிபட்டு வந்திருந்தனர். கடந்த பத்து வருட காலமாக  பட்டி யல் இன  மக்களை கோவிலுக்குள் சென்று  வழிபட விடாமல் உயர் சாதியை சேர்ந்த  சிலர் தீண்டாமையை கடைப்பிடித்து வரு கின்றனர். இதனைக் கண்டித்து  பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த மோதில் ராம், சின்னச் சாமி, ராமசாமி  ஆகியோர் தலைமையில் எங்கள் சமூகத்தினரை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்  தப்பட்டுள்ளது. ஆனால் உரிய முடிவு எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பட்டிய லின மக்களை கோவிலுக்குள் நுழைய விடா மல் தீண்டாமையை கடைப்பிடித்து வரு கின்றனர்.

இது சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை மறுக்கக்கூடிய செயல். எனவே பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும். தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த மனுவின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. சாமி கும்பிடுவதில் பாகுபாடு பார்க்கக் கூடாது:அரசு அரசின்  மூத்த வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி வாதிடுகையில், கடவுள் அனை வருக்கும் பொதுவானவர். சாமி கும்பிடு வதில் எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. இது போன்று சட்டத்தை மீறுபவர்கள்  மீது கடு மையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. எனவே இந்த விவகாரத்தில் அரசு  உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நீதி பதிகளிடம் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பட்டியலின மக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.  மேலும் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்சாதி வகுப் பைச் சேர்ந்த மோதில் ராம், சின்னச்சாமி,  ராமசாமி  ஆகியோர் எழுத்துப்பூர்வமான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

விருதுநகர் சந்தை: துவரை, உளுந்து, பாமாயில் விலை உயர்வு

விருதுநகர், நவ.5- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு. உருட்டு உளுந்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விலையானது உயர்ந்து காணப்பட்டது, விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளி யிடப்படுவது வழக்கம், அதில். கடந்த வாரம் 15 கிலோ  பாமாயில் விலையானது ரூ,1640க்கு விற்பனை செய்யப்  பட்டது, இந்தநிலையில் ரூ,10 உயர்த்தப்பட்டு தற்போது ரூ1650க்கு விற்கப்படுகிறது, இதேபோல். கடந்த வாரம் 100 கிலோ ,10500க்கு விற்கப்பட்டு வந்த உருட்டு உளுந்தம் பருப்பின் விலை யானது தற்போது ரூ,300 உயர்த்தப்பட்டு ரூ,10800க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும். கடந்த வாரம் 100 கிலோ பாசிப்பருப்பின் விலை 9300க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம்  ரூ,100 உயர்த்தப்பட்டு. தற்போது ,9400க்கு விற்பனை யாகிறது, அதேவேளை. கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு ரூ, 11000-க்கு  விற்று வந்த நிலையில். இந்த வாரம்  ரூ,200 குறைவு ஏற்பட்டு தற்போது ரூ,10800க்கு விற்பனை  செய்யப்படுகிறது, பிற பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகனம் மோதி  ரியல் எஸ்டேட் அதிபர் பலி

தேனி, நவ.5- போடி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்  ரியல் எஸ்டேட் அதிபர் பலியானார் .மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் பைக்கை ஓட்டியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டி திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் தாத்தனகவுண்டர் மகன்  ராமராஜ் (66). இவர் தற்போது போடி கிருஷ்ணா நகரில் குடியிருந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.  வெள்ளிக்கிழமை கிருஷ்ணா நகர் வளைவு அருகே போடி-தேவாரம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த மோட்டார் பைக் ராமராஜ் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். ராமராஜ் மீது மோதிய மோட்டார் பைக் நிற்காமல் சென்றுவிட்டது. பலத்த காயமடைந்த ராமராஜை தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக் காக மதுரை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்ததில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதுகுறித்து ராமராஜ்  மனைவி ரதினா (56) கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவு களின் மூலம் விபத்து ஏற்படுத்திய மோட்டார் பைக்கை  கண்டுபிடித்தனர். மோட்டார் பைக்கை ஓட்டியவரை தேடி வருகின்றனர்.

கனமழையால் தேனி மாவட்டத்தில் 10 வீடுகள் சேதம்

தேனி, நவ.5- வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத்  தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழையும், கடலை ஒட்டியுள்ள மாவட்டங்க ளில் மிக கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணை கள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்  பட்டு வருகிறது. முல்லை பெரியாறு, வைகை, வராகநதி, கொட்டக்குடி ஆறுகளில் தண்ணீர்  கரை புரண்டு ஓடுகிறது. மேலும் கும்பக்கரை,  சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி  வருகிறது. எனவே பொது மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க பொதுப்பணித்துறையினர் அறி வுறுத்தி உள்ளனர்.மாவட்டத்தில் 10  வீடுகள் பகுதி இடிந்து சேதம் அடைந்துள்ளது . அணைகளின் நீர்மட்டம்  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.55 அடி .நீர்வரத்து  1334 கன அடி .திறப்பு  525 கனஅடி.வைகை அணையின் நீர்மட்டம் 69.65 அடியாக உள்ளது. 1938 கனஅடிநீர் வரு கிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1269 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 55 அடியில் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 132 கனஅடியில் 40 கனஅடி நீர் பாசனத்திற்கும் 92 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.சோத் துப்பாறை அணை  நிரம்பி 126.87 அடியில் உள்ளது. 465 கனஅடிநீர் வருகிறது. இதில் 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், திறக்கப்படுகிறது. ஆண்டிபட்டி -16.2 ,பெரியாறு 9.8, தேக்கடி 15, கூடலூர் 34.2, உத்தமபாளையம் 5.8, வைகை அணை 1, போடி 21.6, , சோத்துப் பாறை 26, பெரியகுளம் 4, வீரபாண்டி 33.2, அரண்மனைப்புதூர் 8.4 மி.மீ மழையளவு பதி வாகி உள்ளது.

வடமதுரை அருகே  4 வயது சிறுமி மர்ம  மரணம்

திண்டுக்கல், நவ.5- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்  (வயது 30). இவரது மனைவி கௌரி (வயது 25). இந்த  தம்பதியருக்கு 4 வயதில் சிவானி என்ற மகள் உள்ளார்.  பிரகாஷ், கௌரி திருப்பூரில் உள்ள தனியார் மில்லில்  வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் பணியாற்றும்  மில்லில் திண்டுக்கல் மாவட்டம் செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மனைவி கீர்த்திகா (வயது 32) என்பவர் வேலை பார்த்து வந்தார். ராஜேஷ்குமார் மற்றும் அவரது மனைவி கீர்த்திகாவிற்கு குழந்தையில்லாத காரணத்தால் சிவானியை தாங்கள் வளர்த்துக்கொள்வ தாக கேட்டு வளர்த்து வந்துள்ளனர். அவ்வப்போது குழந்தையிடம் பெற்றோர் செல்போனில் பேசி வந்துள்ளனர்.  இந்நிலையில் வெள்ளியன்று காலை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பெற்றோரை உடனடி யாக வரச்சொல்லியுள்ளார் கீர்த்திகா. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பிரகாஷ் மற்றும் கௌரி பதற்ற மடைந்து வடமதுரைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை சிவானி மதுரை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். குழந்தை சிவானியின்  உடலில் சூடு வைத் ததற்கான காயங்கள் இருந்ததாகவும், ரத்தப் போக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது, இது தொடர்பாக குழந்  தையின் பெற்றோர் பிரகாஷ் மற்றும் கௌரி கொடுத்த புகா ரின் பேரில்  வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து  ராஜேஷ்குமார் மற்றும் கீர்த்திகாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.