நாகர்கோவில், ஜூலை 8- கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழியர்க ளின் ஊதியத்தை அதிகரிக்கவும், காலிப் பணி இடங்களை உடனே நிரப்பிடவும் நட வடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி. கே.சேகர் பாபுவின் அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் (சிஐடியு) வரவேற்றுள் ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். ராமச்சந்திரன், செயலாளர் அஜிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருவட்டார் அருள் மிகு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடை பெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சர் பி. கே. சேகர் பாபு அறநிலைய துறையில் ஊதிய உயர்வு, காலி இடங்கள் நிரப்ப நடவடிக் கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வறி விப்பு நீண்ட காலமாக குறைவாக ஊதியம் பெற்று வரும் கோவில் ஊழியர்கள் மத்தி யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1978 முதல் அரசாணைப் படி ஊதிய நிர்ண யம் செய்யப்படாமல் குமரி மாவட்டத்தி லுள்ள 490 கோவில்களில் பணியாற்றும் ஊழி யர்கள் மிகவும் குறைவாகவே ஊதியம் பெற்று வருகின்றனர். 1978 அரசு ஆணைப் படி ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டி கடந்த டிசம்பர் 12 அன்று அமைச்சரை சென்னையில் நேரில் சந்தித்து ஆலய ஊழி யர் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர். கோரிக்கையின் நியாயத்தை ஏற்று மாதம் ரூ 2000 இடைக் கால நிவாரணம் வழங்க உத்தரவிடபட்டது. இந்நிலையில் அரசு ஆணைப்படி ஊதிய நிர்ணயம் செய்திட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019 இல் தொடுத்த வழக்கில் 12 வாரத்திற்குள் ஊதிய நிர்ணயம் செய்திட 24.05.2022 இல் நீதிமன்றம் உத்தர விட்டது
மேலும், இது தொடர்பாக நீதிமன்ற உத்தர வினை நிறைவேற்றிட அமைச்சரின் கவ னத்திற்கு 13.06.2022 இல் கொண்டு செல்லப் பட்டது. மேலும், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறை பற்றிய விவரங்கள் அமைச்ச ரிடம் விளக்கமாக எழுத்து பூர்வமாக சமர்ப் பிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் அனு மதிக்கப்பட்ட 804 பணியிடங்களில் 387 பணி யாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். எஞ்சி யுள்ள 400 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி யாக உள்ளன. இதனால் திருகோவில்களில் காவலும் காப்பானும் இல்லாது சீரழிப்பா ளர்கள் கையில் நிர்வாகம் சென்றடைந்தது. இதனால் ஆலய ஊழியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இந்நிலை உணர்ந்து கொண்டு ஊதிய உயர்வும், காலியிடங்களுக்கு பணியா ளர்கள் நியமனமும் சம்பந்தமான அமைச்ச ரின் இவ்வறிவிப்பு வேதனையுற்றுக் கிடந்த ஊழியர்கள் வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகா சிவராத்திரி யன்று சிவாலய ஓட்டம் நடைபெறும் கோவில்களை ஆய்வு செய்து திருப்பணி களுக்கு உத்தரவிட்டதும் மாவட்டம் முழுவ தும் பழமைவாய்ந்த 100 கோவில்களில் ரூபாய் 10 கோடி செலவில் குடமுழுக்கு நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.