தூத்துக்குடி, டிச.5- தூத்துக்குடியில் மழைநீரை அகற்ற நவீன பம்ப் மோட்டார் கள் வாங்குவதற்கு வ.உ.சிதம்பர னார் துறைமுகம் சார்பில் ரூ.18 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 39 செ.மீ மழை பெய்துள்ளதால், (மாவட்டத்தின் சராசரி மழையின் அளவு 18 செ.மீ.) மாவட்டத்தின் பல பகுதிகளில் கடு மையான வெள்ளம் மற்றும் நீர் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த ஆண் டின் நவம்பர் மாதத்தில் 43 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பி டத்தக்கது. வ.உ.சிதம்பரனார் துறை முகம், மழை காலங்களில் தூத் துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு துறைமுகத் தின் தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் பம்புகளை வழங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு துணை யாக நின்று தனது பேராதரவை வழங்கி வருகிறது.
இந்நிலை யில், தூத்துக்குடி மாவட்ட நிர்வா கத்திற்கு, பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ் நவீன பம்ப் மோட்டார்களை வாங் குவதற்கு ரூ18 லட்சம் நிதியினை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் வழங்கியது. இதற்கான காசோலையை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், துணைத் தலைவர் பிமல்குமார் ஜா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜிடம் வழங்கினார். அப்போது துறை முக பொறுப்புக் கழகத் தலைவர் கூறுகையில், வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு தேவை யான அனைத்து உதவிகளை யும் பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ் வழங்குவ தற்கு தயாராக உள்ளது என்றார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத் தில் இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக தூத்துக் குடி நகரம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நீர் தேக்கத் தினை கட்டுபடுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளையும் பாராட்டினார். மாவட்ட ஆட்சியர் தனது உரையில், அதிநவீன பம்ப் மோட்டார்களை வாங்குவதற் காக ரூபாய் 18 லட்சத்திற்கான காசோலையினை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வழங்கி யதற்கு தனது நன்றியினை தெரி வித்து கொண்டார். மேலும், இவ் வாறாக வாங்கப்படும் அதிநவீன மோட்டார்கள், இம்மழை காலத் திற்கு பின்பும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு தேவைகேற்ப உபயோகிக்கப்படும் என்றார். தூத்துக்குடி மாவாட்ட நிர்வா கம், மாவட்டத்தில் மழைகாலங் களில் ஏற்படும் நீர்தேக்கங்களை நிரந்ததரமாக அகற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி யுள்ளது என்று கூறினார்.