districts

img

விவசாய கூலி தொழிலாளர்களுக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும்

மயிலாடுதுறை, டிச.25 - அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட 2 ஆவது மாநாடு சீர்காழியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் காபிரியேல் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட துணைத் தலைவர் எம்.மணி, எம்.செல்லப்பன் வரவேற்று பேசினர். மாநாட்டை துவக்கி வைத்து மாநில பொருளாளர் எஸ்.சங்கர் உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர்.  நூறு நாள் வேலையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சட்டக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். அனைத்து பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற வேலை திட்டத்தை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000 வழங்க வேண்டும். குடிமனை, பட்டா இல்லாத அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூ.3000 வழங்க வேண்டும். நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்களுக்கென தனித் துறையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தின் புதிய தலைவராக காபிரியேல், செயலாளராக ஜி.ஸ்டாலின், பொருளாளராக அ.ராஜேஷ், துணைத் தலைவர்களாக எம்.மணி, சிரோன்மணி, துணைச் செயலாளர்களாக வீ.எம்.சரவணன், ஜி.பாஸ்கரன் உட்பட 20 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் நிறைவுரையாற்றினர். வரவேற்புக்குழு தலைவர் எம்.பிரபாகரன் நன்றி கூறினார்.