திருவாரூர் மாவட்டம் குடவாசல் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர் (எஸ்.எஸ்.ஐ) ஜாகிர் உசேன். இவர் தனது வியாபார நிமித்தமாக லண்டனில் உள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தனது ஜனநாயக கடமையை ஆற்ற, லண்டனில் இருந்து கடந்த பிப்.17 ஆம் தேதி குடவாசல் வந்தார். சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்காளர் ஜாகிர் உசேன் லண்டனிலிருந்து வாக்களிக்க வந்திருப்பதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, திமுக திமுக மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகர செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் ஜாகிர் உசேனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.