கடமலைக்குண்டு, ஜன.13 - தேனி மாவட்டம், மயிலாடும்பாறை விவேகானந்தா கபடி நண்பர்கள் குழு மற்றும் கிராம பொது மக்கள் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி மயிலா டும்பாறை கிராமத்தில் நடைபெற்றது. இதில் தேவாரம், தேனி, திண்டுக்கல், கம்பம், கோட்டூர், மேலப்பட்டி, பாலூத்து, கூடலூர், முத்தாலம்பாறை, கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, வண் ணாத்திப்பாறை, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி யில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான் காம் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை விவேகானந்தா கபடி குழு நண்பர்கள் செய்திருந்தனர்.