districts

img

விவேகானந்தர் பிறந்த நாள் விழா ஈத்தாமொழியில் இளைஞர், மாணவர் உறுதியேற்பு

நாகர்கோவில் ஜன. 12 கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் வட்டாரம் ஈத்தாமொழி சந்திப்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத் தை முன்னிட்டு எஸ்.எப்.ஐ மற்றும் டி.ஒய்.எப்.ஐ சார்பில் இளைஞர் களும் மாணவர்களும் உறுதி மொழி ஏற்றக் கொண்டனர்.  சுவாமி விவேகானந்தரின் 159 வது பிறந்ததினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து “இளை ஞர்கள் ஒன்றிணைவோம் தேசம் காப்போம்” என்ற தலைப்பில் உறுதிமொழியேற்பு மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல் நிகழ்ச்சியும் நடை பெற்றது. இந்நிகழ்வில் இந்திய மாண வர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்துரு தலைமை தாங்கினார். மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஈத்தாமொழி கிளை செயலாளர் பிரவின், மற்றும் வட்டார குழு உறுப்பினர்கள் சபரீஷ், சுடலை மணி, இந்திய மாணவர் சங்கத் தின் இராஜாக்கமங்கலம் வட்டார செயலாளர் முத்து சிவம் மற்றும் வட்டார குழு உறுப்பினர்கள் சந்தோஷ், நிரஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.