விருதுநகர், மார்ச் 28- விருதுநகர் பகுதியில் குழாய் கள் மற்றும் சாலைகளை உடைத்து விட்டு அதை சீரமைக்காமல் குடி நீர் வடிகால் வாரியத்தினர் சென்று விடுவதாக நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித் தனர். விருதுநகர் நகர்மன்ற சாதா ரணக் கூட்டம் நகராட்சித் தலை வர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சி. ஸ்டான்லிபாபு, பொறியாளர் மணி, துணைத் தலைவர் தனலட்சுமி ஆகி யோர் முன்னில வகித்தனர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு: மாநகராட்சிகளில் கூட பட்ஜெட் தாக்கல் செய்து அதன் நகலை உறுப்பினர்களுக்கு வழங்குகின்ற னர். இங்கு ஏன்? நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும், நகராட்சிக்கு சொந்தமான ஏராள மான சொத்துக்கள் உள்ளன. அறிக்கை தந்தால் தான் அதை சரிபார்க்க முடியும்?என உறுப்பினர் கள் ஆறுமுகம், ஜெயக்குமார், முத்துலெட்சுமி ஆகியோர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆணையா ளர், நிதி நிலை அறிக்கை தயாரா கிக் கொண்டு இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கழிவுநீர் வாறுகால்களில் குப்பைகள்
வீடு வீடாகச் சென்று 100 சத வீதம் குப்பைகளை சேகரிப்பதாக கூறுகிறீர்கள்? பின்பு, ஏன்? சாலை யோரங்களில், கழிவு நீர் வாறுகால் களில் குப்பைகள் தேங்கி கிடக் கின்றன? என சிபிஎம் உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். ஞாயிற்றுக்கிழமைகளில் துப்பு ரவு பணியாளர்கள் குப்பை வாங்க வருவதில்லை. இதனால், சாலை களில் குப்பைகள் தேங்கி கிடக் கின்றன என உறுப்பினர் முத்து லட்சுமி புகார் தெரிவித்தார். இதையடுத்து பேசிய தலை வர், வரும் ஏப்ரல் 1 முதல் துப்பு ரவுப்பணிகள் முழுவதும் தனியார் ஒப்பந்தகாரர் மூலம் செய்யப்பட உள்ளது. அதில் கூடுதலான பணி யாளர்கள் உள்ளனர். இனி இது போன்ற பிரச்சனை வர வாய்ப் பில்லை என தெரிவித்தார். குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் களை சேதப்படுத்தி விட்டு அதை சரி செய்யாமல் சென்று விடுகின்ற னர். மேலும், தோண்டப்பட்ட சாலை களை சீரமைக்கவில்லை எனவும், புகார் தெரிவிக்க மேற்பார்வையா ளரை செல்போனில் அழைத்தால் பதில் தருவதில்லையென உறுப்பி னர் சரவணன், வெங்கடேஷ், கலை யரசன், பேபி ஆகியோர் புகார் தெரி வித்தனர். அதற்கு பதிலளித்த தலைவர், பொங்கல் பண்டிகை முடியும் வரை தோண்டும் பணிகளை நிறுத்தி விடு வோம். அதற்குப்பின் பணிகளை செய்யச் சொல்வோம் என்றார். அப்போது பேசிய உறுப்பினர் ஜெயக்குமார், தோண்டும் பணி யை நிறுத்துங்கள். ஆனால், ஏற்க னவே தோண்டப்பட்ட பள்ளங் களை சீரமைத்து தரச் சொல்லுங் கள் என்றார்.
அதற்குத் தலைவர் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார். திருவிழா காலங்களில் தெப் பத்தைச் சுற்றி கடைகள் அமைக்க நகராட்சி சார்பில் ஏலம் விடுவது வழக்கம். அதுகுறித்த தகவல் மன்றப் பொருளில் ஏன்? இல்லை யென ஆறுமுகம் கேள்வி எழுப்பி னார். இதற்கு பதில் கூறிய தலைவர், இன்னும் டெண்டர் விடவில்லை என்றார். நகராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி நடைபெறு கிறது. அதில் எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். பின்பு பேசிய தலைவர், இலவச மாக வழங்கி வருகிறோம் என்றார். இதையடுத்து, பேசிய ஆறு முகம், சிறிய ஊராட்சிகளில் கூட உரங்களை வியாபாரம் செய்கின்ற னர். ஏன்? நாம் இலவசமாக வழங்க வேண்டும் என்றார். அஹமது நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடம் பாதுகாப் பற்ற நிலையில் உள்ளது. அங்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் முடிவை கைவிட வேண்டும். பாதுகாப்பான பள்ளிகளில் காலை உணவு தயா ரிக்க வேண்டும் என முத்துலட்சுமி, ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்த னர்.
அப்போது பேசிய தலைவர், இது தற்காலிக ஏற்பாடு தான். பின்பு, வேறு பகுதிக்கு மாற்றிக் கொள்வோம் என்றார். தெற்குரத வீதியில் ஏற்க னவே இருபுறமும் மழை நீர் வடி கால் உள்ளது. அதில் ஒருபுறத்தில் சிலர் மண்ணை கொட்டி வைத் துள்ளனர். அதை அகற்றினால் மழைநீர் சென்று விடும். எனவே, தேர் செல்லும் சாலையை சேதப் படுத்தி குறுக்கே குழாய் அமைக்க கூடாது என ஜெயக்குமார் தெரி வித்தார். அப்போது குறுக்கிட்ட உறுப்பி னர் மாலதி, அங்கு தண்ணீர் தேங்கி உள்ளது. வடிகால் இல்லையென தெரிவித்தார். அப்போது இருவ ருக்குமிடையே வாக்குவாதம் ஏற் பட்டது. பின்பு, பேசிய தலைவர் அப்பகு தியில் களஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார்.
இணைப்பு இல்லையெனில் கட்டணம் வேண்டாம்
பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் கட்டணம் செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத் துவது ஏன்? என உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இணைப்பு இல்லையென்றால் கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை என தலைவர் பதில ளித்தார். பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை வரை கழிவு நீர் தேங்கியுள்ளது. அங்கு தூர்வாரும் பணியை செய்ய வேண்டும். தூர் வாராத காரணத்தால், காந்திபுரம் தெருப் பகுதிக்குள் மழை காலங்க ளில் கழிவு நீர் தேங்குகிறது என உறுப்பினர் உமாராணி தெரி வித்தார். உடனடியாக தூர்வாரும் பணி துவங்கப்படும் என தலைவர் தெரி வித்தார். துண்டிக்கப்படும் குடிநீர் இணைப்புகளுக்கான டெபா சிட் தொகையை திரும்ப வழங்கு வதில்லை. கூடுதலாக துண்டிப்பு கட்டணம் ரூ.1100 செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துகின்ற னர் என உறுப்பினர் ஜெயக்குமார் புகார் தெரிவித்தார். பின்பு, ஒரே தீர்மானம் இரு இடங்களில் வந்ததால் ஒரு தீர்மா னம் ரத்து செய்யப்பட்டது. இதை யடுத்து, 38 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.