விருதுநகர், ஜூன் 4- விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் உணவுப் பொருட்களின் விலை யை நிர்ணயம் செய்து விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குண்டூர் வத்தல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 உயர்ந்துள்ளது. கடந்த வாரம் குவிண்டால் ரூ.19 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த குண்டூர் வத்தல் விலை இந்த வாரம் ரூ. 19,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் போதிய விளைச்சல் இல்லாத காரணத்தால் குண்டூர் வத்தல் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மசூர் பருப்பின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.9900 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த மசூர் பருப்பானது, மூடை ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படு கிறது. மேலும், 40 கிலோ மல்லியின் விலை யானது கடந்த வாரம் ரூ.5200 முதல் 5300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 குறைந்து ரூ.5100 முதல் 5200க்கு விற்கப்படுகிறது. அதேநேரத்தில் நாட்டு மல்லியின் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் சந்தையில் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த வாரம் ரூ.4900 முதல் 5600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டு மல்லி தற்போது ரூ.300 குறைந்துள்ளது. இதனால், ரூ.4600 முதல் 5200 வரை விற்கப்பட்டு வரு கிறது. மேலும், தொடர்ந்து வெளி நாடு களில் இருந்து இறக்குமதி அதிக அளவில் செய்யப்பட்டு வருவதால் பாமாயில் விலை கடந்த வாரத்தை விட ரூ.10 குறைந்து 15 கிலோவிற்கு ரூ.2450 என்ற விலையில் விற்கப்படு கிறது. எள் புண்ணாக்கின் விலையும் ( 50 கி) கடந்த வாரத்தை விட ரூ.150 குறைக்கப்பட்டு தற்போது ரூ.2100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.