districts

img

30 ஆண்டுகள் காட்சிப் பொருளாக உள்ள விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்தக் கோரி சிபிஎம் தர்ணா

விருதுநகர், ஜூன் 16- மாவட்டத் தலைநகராக உள்ள விருதுநகரில் புதிய பேருந்து நிலை யத்தை முறையாக செயல்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. விருதுநகர்-சாத்தூர் சாலையில் புதிய பேருந்து நிலையம் கடந்த 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு பேருந்துகள் வருவதில்லை. இத னால் காட்சிப் பொருளாக உள்ளது. இரவு நேரங்களில் விருதுநகருக்குள் பேருந்துகள் வருவது கிடையாது.  இதனால் வெளியூரில் இருந்து விருது நகருக்கு வரும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பைபாஸ் ரைடர் பேருந்துகள், தொலைதூரப் பேருந்து கள், விருதுநகர்-திருச்செந்தூர், விருதுநகர்-இராமேஸ்வரம், விருது நகர்-கோவில்பட்டி, சிவகாசி-கோவை, சிவகாசி-வேளாங்கண்ணி, கும்பகோணம், திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி ஆகிய பேருந்து களை புதிய பேருந்து நிலையம் வந்து செல்லும் வகையில் இயக்க வேண் டும். தனியார் ஆம்னி பேருந்துகள்  அனைத்தையும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கிட வேண்  டும் என வலியுறுத்தி ஜூன் 16 அன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக் குமார் தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன் பேசினார். மூத்த தலை வர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், தேனிவசந்தன், நகர் செயலாளர் எல்.முருகன் ஆகியோர் விளக்கிப் பேசினர். எம்.மாரிமுத்து நன்றி கூறி னார். மேலும் இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.பாலசுப்பிரமணி யன், ஆர்.முத்துவேலு, எம்.ஜெய பாரத், நகர்குழு உறுப்பினர்கள் பி. ராஜா, ஐ.ஜெயா உட்பட பலர் பங்கேற்  றனர்.