districts

img

தியாகி சந்துரு நினைவு தினம்: வாலிபர்கள் உறுதிமொழியேற்பு

விருதுநகர், ஜூலை.15- கள்ளச் சாராயத்திற்கு எதிராக போராடியதற்காக, சாராய வியாபாரி களால் விருதுநகர் மண்ணில் வெட்டி வீழ்த்தப்பட்டார் தோழர் பி.ஜே.சந்துரு. தியாகி சந்துருவின் 32 வது நினைவு தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் பாண்டியன் நகரில் நடை பெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத், முன்னாள் மாவட்ட செயலாளர் எல்.முரு கன், நகர்க்குழு உறுப்பினர் கார்த்திக்பாபு, புஷ்பராஜ், செல்வக்குமார், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.