districts

img

தரமான அரசி வழங்க உடனடி நடவடிக்கை தேனி மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி

தேனி, ஜன.30- ஆண்டிபட்டி ஒன்றியம் ஆசாரிபட்டி கிராமத்தில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஆண்டிபட்டி வட்டம், மொட்டனூத்து ஊராட்சிக்குட்பட்ட ஆசாரிபட்டி கிராமத்தில் முல்லையம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைக்கு தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாக கூறி கிராம மக்கள் லாரி ,வட்ட வழங்கல் அலுவலரின் வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு உடனடியாக தரமான அரிசி வழங்கிட உத்தரவிட்டார். அதன்படி,  நியாய விலைக்கடைக்கு அரிசி தரமானதாக வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி விநியோகம் செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆசாரிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று அரிசியின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குடும்ப அட்டைதார்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.