திருவில்லிபுத்தூர், மார்ச் 9- திருவில்லிபுத்தூர் அச்சம் தவிர்த்தான் கிராமத்தில் நான்கு வழிச்சாலைக்காக பி.வி லட்சுமி நாராயணன் மற்றும் கேஎம்சி நிறுவனம் சார்பில் கிரஷர் கல்குவாரி அமைப்பதற்காக அரசு அனுமதி கொடுக்க உள்ளது. தனியார் நிறுவனங்கள் அமைக்கவுள்ள கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்காகப் போராடிய விவசாயிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-கிராம மக்கள் சார்பில் வியாழக்கிழமை திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு .ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கல்குவாரி எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பு குழுவின் கன்வீனர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அச்சம்தவிர்த்தான், அச்சம் தவிர்த்தான் கிழக்கு, நரியன்குளம் வடக்கு, என்.திருவேங்கடபுரம், மேல கோடாங்கிபட்டி ,கீழ கோடாங்கிபட்டி கிராமங்களை சேர்ந்த நாட்டாமைகள் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பா ளர்கள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் ஜோதிலட்சுமி, திருமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜய முருகன், சந்தனம், பெருமாள், ரேணுகாதேவி, மூர்த்தி, கணேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.