districts

img

சாலை வசதி கோரி கிராமமக்கள் மறியல்-கைது

நத்தம், ஜூன் 8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி-சுங்கச்சாவடி பகுதி யில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பொடுகம்பட்டி கிராமம். பரளி டோல்கேட் பகுதி யில் இருந்து இந்த கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி கிடையாது.  இது குறித்து பலமுறை முறை யிட்டும் சாலை வசதி செய்து தரப்  படவில்லை.இதனால் கோபம டைந்த அப்பகுதி கிராம மக்கள் சாலை வசதியை உடனடியாக செய்து வலியுறுத்தி மதுரை - நத் தம் நான்குவழிச்சாலையில் உள்ள பரளி- டோல்கேட் பகுதியில் ஜூன் 8 அன்று மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட் டத்தை கைவிடவில்லை. இத னால் மறியலில் ஈடுபட்ட 61 பேரை  நத்தம் போலீசார் கைது செய்தனர்.