districts

29 கிராமங்களில் கிராம சபை கூட்டம்

திருவில்லிபுத்தூர், மே 2-  திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 29 கிரா மங்களில் தொழிலாளர் தினத் தன்று கிராமசபை கூட்டம் நடை பெற்றது.  இதில் கிராம ஊரக வரவு செலவு குறித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிப்படுத்துவது குறித்து, தூய்மை பாரத இயக்கம் சல்ஜீவன் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் அனைத்து  துறைகளி லும் பொருட்கள் குறித்து விவா திக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. விழுப்பனூர் மற்றும் பிள்ளை யார்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மண்டல அலுவலர் மற்றும் உதவி திட்ட அலுவலர் நாகரத்தினம், திரு வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சிவக்குமார், ராமமூர்த்தி பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் காசி என்ற கருப்பையா, பூவாணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி துரைப் பாண்டியன், விழுப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.