மதுரை குருவிக்காரன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் சனிக்கிழமையன்று பார்வையிட்டனர். இந்நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் தியாகராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சாலிதளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.