districts

img

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்

தேனி, ஜன.31- ஆண்டிபட்டி அருகே  அரசு உயர்நிலைப்பள்ளி யில் கழிப்பறையை மாண வர்கள் சுத்தம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்  படங்கள் சமூக வலைதளங்க ளில் வேகமாக பரவி வரு கிறது. தேனி மாவட்டம், ஆண்டி பட்டி, சக்கம்பட்டி பகுதியில் முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 180க்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில் சக்கம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்  யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் மாண வர்கள் கழிப்பறையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து கழிப்பறையை விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்கின்றனர். இதே போல மாணவிகள் சிலர் பள்ளியின் வளாகத்தை கூட்டி பெருக்குவதுடன், ஒட்டடை அடிக்கும் புகைப் படமும் பரவி வருகிறது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கண்ட  மாணவர்களின் பெற்றோர் கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளிக்கு படிப்ப தற்காக அனுப்பிய தங்கள்  குழந்தைகளை கழிப்பறை யை சுத்தம் செய்ய வைத் துள்ளதை கண்டு வேதனை அடைந்துள்ளனர்.  சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதை தொடர்ந்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், சக்  கம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்தார். மாண வர்கள் கழிப்பறையை சுத்  தம் செய்ய வைத்த சம்பவம் குறித்து பள்ளியின் தலை மை ஆசிரியர் ஜனகராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பள்ளியின் முன்புற கதவு அடைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.