கொச்சி, டிச. 9- பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிறுபிள்ளைத்தனமாகவிளையாடுகிறார்களா? உயர் அதிகாரிகள் இப்படித்தான் நடந்து கொள்வதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயர் அதிகாரிகள் இப்படி நடந்துகொண்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். துணை வேந்தர் நியமனத்திற்கான செனட் பிரதிநிதியை சேர்க்காத அறிவிப்பை ஏற்க முடியாது. வேந்தர்கள் வருவார்கள் போவார்கள். மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பி னர்களை ஆளுநர் ஆரிப் முகமது கான் நீக்கினார். இதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், இது சட்டவிரோதமானது என்றும், அதை ரத்து செய்யவும் வாய்மொழியாகக் குறிப்பிட்டார். செனட் உறுப்பினர்களை வெளியேற்றும் ஆளுநரின் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டால், தேடல் குழுவால் செனட்டின் பிரதிநிதியை வழங்க முடியுமா என்றும் நீதிமன்றம் விசாரித்தது. ஆளுநரின் அறிவிப்பு செயல்படவில்லை என்றும்,அதை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு சில நொடிகள் போதும் என்றும் நீதிமன்றம் வாய்மொழியாக குறிப்பிட்டது. செனட்உறுப்பினர்கள் ஆளுநரிடம் கேள்வி கேட்க முடியாது. செனட்டின் உறுப்பினர்கள் ஆளுநரால் பரிந்துரைக்கப்படு கிறார்கள். நியமன அதிகாரியை கேள்வி கேட்கமுடி யுமா? வேந்தரின் முடிவிற்கு எதிராக புகார் இருந்தால், அவரை சமாதானப்படுத்தி பதவி விலக வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேந்தரின் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்றும் செனட்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை நீதிமன்றம் விமர்சித்தது. நீதிமன்றத்தின் மீது செனட் சபைக்கு நம்பிக்கை இல்லை என்பதை இது குறிக்கிறது. ஆளுநருக்கு ஒரு நபரை பிடிக்க வில்லை என்பதற்காக சலுகையை ரத்து செய்ய முடியாது. இது சட்டப்பூர்வமானது என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. இந்த வழக்கின் விசாரணை வியாழன்றும் நடைபெற்றது.