மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பென்னகரம், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 28 அன்று நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் 425 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், துணை மேயர் .தி.நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.கார்த்திகா , மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள், பள்ளி தலைமையாசிரியர் மு.அய்யா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.