திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் ராம அழகர் பச்சை பட்டு உடுத்தி வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் இறங்கினார் . இதனை முன்னிட்டு சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிஐடியு ஒன்றிய கன்வினர் வி.கே.முருகன் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆர். பால்ராஜ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் பாலமுருகன், தலைவர் தங்கபாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.