districts

img

கீழமேல்குடி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவராக வெள்ளமுத்து தேர்வு

சிவகங்கை, டிச.21- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றி யம் கீழமேல்குடி கண்மாய்  பாசன நீரினை பயன்படுத்து வோர் சங்கத்தின் தலைவ ராக பி .வெள்ளமுத்துபோட்டி யின்றி தேர்வாகியுள்ளார் .  தேர்வாகியுள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தோழர் வெள்ள முத்துவை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராம லிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் முத்து ராம லிங்கம்,ஒன்றியத் தலைவர் பரமாத்மா உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   கீழமேல்குடி கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெள்ள முத்து நமது நிருபரிடம் கூறுகையில், வைகை ஆற்றிலி ருந்து கீழமேல்குடி கண்மாய்க்கு தண்ணீர் வந்தது.நீண்ட வருடத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் மது சூதன்ரெட்டி,பொதுப்பணித்துறை அதிகாரிகள்  மாற்று வழியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தமைக்கு கீழமேல்குடி கிராம மக்கள் சார்பில் நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம்.  தற்போது குறைந்தளவில் தண்ணீர் வந்திருக்கிறது.தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். கீழமேல்குடி கண்மாயில் நான்கு மடைகளில் ஒரு மடை பழுதாகி உள் ளது. இதனை பொதுப்பணித்துறை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.