தேனி, மே 12- வீரபாண்டி கெளமாரி யம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடை பெற்ற தேரோட்டத்தில் ஆயி ரக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர் . தேனி வீரபாண்டி கௌ மாரியம்மன் கோவில் சித்தி ரைத் திருவிழா மே 9-ஆம் தேதி தொடங்கியது. ஒவ் வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்துடன் மலர் விமானம், முத்துப் பல்லக்கு, புஷ்பபல்லக்கு வாகனங்களில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். விழாவின் உச்ச நிகழ்ச்சி யாக வெள்ளிக்கிழமை மாலை திருத்தேர் வடம் பிடித் தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தேருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாழி மற்றும் யாக பூஜை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ். ஆர்.ஷஜிவனா வடம்பிடித்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரோ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், இணை ஆணையர் பாரதி, கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, தேனி ஒன்றி யக்குழு தலைவர் எம்.சக்கர வர்த்தி உட்படபலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தைத் தொடர்ந்து கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. தொ டர்ந்து ஒவ்வொரு நாளும் தெற்குரதவீதி, மேற்கு ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெற்று 15-ஆம் தேதி தேர் நிலைநிறுத்தப்படும். மே 16-ஆம் தேதி ஊர்ப் பொங்கலுடன் திருவிழா நிறைவடைகிறது.